கோவையில் நம்ம ஊரு சந்தை - ஆர்வத்துடன் பொருட்களை வாங்கி குவித்த மக்கள்

கோவை வீரபாண்டி பிரிவு பகுதியில் நம்ம ஊரு சந்தை என்ற பெயரில் இயற்கை வேளாண் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை ஒன்றினைத்து இயல்வாகை என்ற அமைப்பு தனியார் பள்ளியுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் கடைகளை அமைத்து பொருட்களை விற்பனை செய்தனர்.



கோவை: கோவை வீரபாண்டி பிரிவு பகுதியில் உள்ள செயிண்ட் ஜான் பள்ளி, மாணவ மாணவிகளிடையே இயற்கை சார்ந்த கல்வியை வழங்கி வருகிறது. இதற்கென பிரத்யேகமாக பள்ளி வளாகத்திலேயே தோட்டங்கள் உருவாக்கப்பட்டு இயற்கை வழியிலான காய்கறிகள், பழங்கள், மூலிகைகள் பயிரிடுவது, பயன்படுத்துவது குறித்து கற்பித்து வருகிறது.

அதில் ஒரு பகுதியாக இயல்வாகை என்ற அமைப்புடன் இணைந்து இயற்கை வழியில் உருவாக்கப்பட்ட உணவுப் பொருட்களை மட்டும் விற்பனை செய்யும் நம்ம ஊரு சந்தை என்ற நிகழ்வை ஒவ்வொரு மாதமும் நான்காவது ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிட்டது. அதனடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வின் தொடக்க விழாவிற்கு பள்ளியின் தாளாளர் அரவிந்தன் தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் பாஸ்கர் வரவேற்று பேசினார்.



ஒடந்துறை ஊராட்சியின் முன்னாள் தலைவர் சண்முகம் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். மூலிகை ஆராய்ச்சியாளர் மற்றும் பாரம்பரிய மருத்துவர் மரியா பெல்சின் இயற்கைவழி உணவுப் பொருட்கள் குறித்து விளக்கினார்.



தொடர்ந்து நடந்த சந்தையில் 50க்கும் மேற்பட்ட இயற்கைவழி வேளாண் உற்பத்தியாளர்கள் இதில் பங்கேற்ற பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் வகையில் தாங்கள் தயாரித்த செக்கு எண்ணெய் வகைகள், கொல்லி மலை இஞ்சி,முடவாட்டுக்கால் கிழங்கு உள்ளிட்ட மூலிகை உணவுப் பொருட்கள், சிறுதானிய அரிசி வகைகள், இனிப்பு வகைகள், பனை ஓலை விளையாட்டு பொருட்கள், நீரா பானங்கள், பல்வேறு கீரைகளில் தயாரிக்கப்பட்ட தேனீர் உள்ளிட்ட இயற்கை வழிப் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.



இதில் இயற்கை தொடர்பான புத்தகக் கண்காட்சி, நிகர் கலைக்கூடத்தின் பறையிசை முழக்கம், பேராசிரியர் ராமராஜின் நாடகம், தாமரைச் செல்வனின் ஓரிகாமி காகிதக் கலை, மரப்பாச்சி முருகனின் பாரம்பரிய விளையாட்டுகள் ஆகிய நிகழ்வுகளும் நடைபெற்றன. இறுதியில் இயல்வாகை அமைப்பின் தலைவர் அழகேஸ்வரி அசோக் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...