வால்பாறையில் 32 ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா - AST சேகர் தலைமையில் சிலைகள் ஆற்றில் கரைப்பு

வால்பாறை உள்ள புதிய பேருந்து நிலையம், படகு இல்லம் வழியாக ஊர்வலமாக வந்த விநாயகர் சிலைகள் நடுமலை ஆற்றில் கரைக்கப்பட்டன. வரும் வழியில் திரளான பக்தர்கள வழிபாடு நடத்தினர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 32 வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை ஏ எஸ் டி சேகர் ஜி தலைமையில் 108 விநாயகர் சிலைகள் வால்பாறை டவுன் பகுதியில் ஊர்வலமாக சென்று நடுமலை ஆற்றில் கரைக்கப்பட்டன.

வால்பாறை பகுதியில் 62 எஸ்டேட் பகுதியில் உள்ளது. இந்த 62 எஸ்டேட் பகுதிகளிலும் இருந்து இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஒவ்வொரு எஸ்டேட்டிலும் விநாயகர் சிலை வைக்கப்பட்டு ஐந்து தினங்களாக போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைக்கு பூஜை செய்யப்பட்டது.



இதன் தொடர்ச்சியாக வால்பாறை பகுதியில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்பு அனைத்து சிலைகளுக்கும் பூஜை செய்யப்பட்டு மாநில செயலாளர் சி எம் அண்ணாதுரை மற்றும் கோனார் நகைக்கடை வல்லிகண்ணு முன்னிலையிலும் நடத்தப்பட்டன. மாவட்ட துணை தலைவர் எஸ் டி சேகர் தலைவர் தலைமையில் 108 சிலைகள் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைக்கப்பட்டது.



வால்பாறை பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகர், புதிய பேருந்து நிலையம், படகு இல்லம் வழியாக ஊர்வலமாக சென்று நடுமலை ஆற்றில் சிலைகளை கரைக்கப்பட்டன.



இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...