உலகளவில் நடைபெற்ற ராம்ப் வாக் போட்டி - முதலிடம் பிடித்த தமிழ்நாட்டு சிறுவர்

உலகளவில் நடைபெற்ற சிறுவர்களுக்கான ராம்ப் வாக் போட்டியில் கோவையைச் சேர்ந்த சிறுவன் முகமது நிஷார் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.



கோவை: தாய்லாந்தில் உலக அளவிலான Junior Model Fashion Show மற்றும் ராம்ப் வாக் நிகழ்ச்சி நடைபெற்றது.



அதில் பங்கேற்று இந்திய அளவில் கோவையை சேர்ந்த 7 வயது சிறுவன் முகமது நிஷார் முதலிடம் பிடித்து அசத்தினார்.



வெற்றி பெற்று மீண்டும் கோவை திரும்பிய சிறுவன் முகமது நிஷாருக்கு ரயில்நிலையத்தில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.



உலகளவில் போட்டியில் பங்கேற்று இந்தியா அளவில் முதலிடம் பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளதாக சிறுவனை புகழ்ந்தனர்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சிறுவன் தாயார்,



தனது மகனுக்கு மாடலிங் துறையில் அதிகளவில் விருப்பம் இருப்பதனால் 2 ஆண்டுகளாக பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் இதற்காக தனது மகனை சிறப்பு வகுப்பிற்கு அனுப்பி பயிற்சி எடுத்தாக கூறினார்.

தாய்லாந்தில் நடைபெற்ற உலகளவிலான ராம்ப் வாக்கில் போட்டியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சிறுவர்,சிறுமிகள் பங்கேற்றனர். அதில் இந்தியா அளவில் முதல் பரிசு பெற்று வெற்றி பெற்றுள்ளார் எனவும் 'Title Winner Award' வெற்றி வெற்று இந்தியா பெருமை சேர்ந்துள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே தேசிய அளவிலான ராம்ப் வாக் போட்டியில் முகமது நிஷார் இந்தியா அளவில் இரண்டாம் பரிசு பெற்றவர் என குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...