இழப்பீடு தொகை கோரி தரையில் உருண்டு புரண்ட விவசாயிகள் - தாராபுரத்தில் பரபரப்பு

தாராபுரம் நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க அணையின் கட்டுமான பணிக்காக நிலத்தை வழங்கிய விவாயிகள் முழு இழப்பீடு தொகை கேட்டு 45-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் அமைந்துள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க அணையின் கட்டுமான பணிகளுக்காக விவசாயிகளிடமிருந்து 750-ஏக்கர் நிலம் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் கடந்த 1997-ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. 2000-ஆம் ஆண்டு அணைக்கான கட்டுமான பணிகளை தொடங்கப்பட்டது.

விவசாயிகளிடம் அணை கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய விளை நிலங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு தொகை வழங்குவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்து நிலத்தைப் பெற்றுக் கொண்டனர்.

ஆனால் விவசாயிகளிடம் கூறியவாறு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என்பதால் இழப்பீட்டுத் தொகை கேட்டு நீதிமன்றத்தில் விவசாயிகள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. 2017-ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் படி இழப்பீட்டுத் தொகை வட்டியுடன் சேர்த்து வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 24-ஆண்டுகள் ஆகியும் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்காத காரணத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் பலர் இழப்பீட்டுத் தொகை கிடைக்காமல் இறந்துவிட்டனர்.



இருப்பினும் தற்போது உள்ள 150-விவசாயிகள் கோனேரிப்பட்டி பிரிவு பகுதியில் கடந்த 45-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இன்று 45-ஆவது நாள் தொடர் காத்திருக்கு போராட்டத்தில் விவசாயிகள் தரையில் உருண்டு பிரலும் போராட்டம் ஈடுபட்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...