பட்டா பூமியாக மாறிய மயானம் - மாற்று இடம் வழங்குமாறு கோவை ஆட்சியரிடம் ஆதிதிராவிடர் மக்கள் மனு

மதுக்கரை தாலுக்கா அரிசிபாளையம் ஆதிதிராவிடர் காலனி மக்கள் தங்களுக்கு மயானம் ஏற்பாடு செய்து தரக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் அரிசிபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் 250க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.



இந்த நிலையில் ஊருக்கு தென்புறமாக மயானம் அமைந்துள்ள நிலையில், அருகில் உள்ள நில உரிமையாளர் தனியார் நிறுவன ரியல் எஸ்டேட்டுக்கு அவரது நிலத்தை விற்பனை செய்து விட்டார். அந்த நிலம் வாங்கியவர்கள் மயானத்தை சுற்றி மதில் சுவர் எழுப்பியுள்ள நிலையில், இது சம்பந்தமாக நாங்கள் தாசில்தாரிடம் மனு கொடுத்ததால் நேரடியாக வந்த அவர் இது பட்டா பூமி என்று கூறிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஊரில் ஏதாவது இறப்பு ஏற்பட்டால் புதைக்க இடம் இல்லை என்பதால் எங்களுக்கு ஏதாவது ஒரு மாற்று இடம் ஏற்பாடு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என காலனி மக்கள் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...