தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் - கோவையில் பாஜக தலைவர் வானதி சீனிவாசன் கோரிக்கை

கோவை மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக பணி நிரந்தரம் இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருவதாக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியில் பணியாற்றும் துய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டுமென வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

தூய்மை இந்தியா நிகழ்ச்சி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வருகிறது.



இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தூய்மை பணிகளில் ஈடுபட்டார்.



மாநகராட்சி தூய்மை பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றிய அவர் தூய்மை பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இதில் கோயம்புத்தூர் பாஜக மாநகர மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மற்றும் பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், ஸ்வச்சதா அபியான் எனும் தூய்மை பாரத இயக்கத்தின் ஒரு அங்கமாக அனைவரும் தூய்மை பணிகளில் ஈடுபட வேண்டும் என பாரத பிரதமர் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க நாடு முழுக்க தூய்மை பணிகளில் கோடிக்கணக்கான நபர்கள் ஈடுபட்டுள்ளனர். பாரதிய ஜனதா கட்சி சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நாங்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளோம். இதுமட்டும் அல்லாமல் தூய்மை பணியாளர்களின் குறைகளையும் கேட்டிருந்தோம். அவர்களின் பிரச்சனைகளை கேட்டுள்ளோம். அதனை தகுந்த முறையில் அரசாங்கத்திடம் எடுத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்துள்ளேன்.

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தூய்மை பணிகள் குறித்து தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறேன். தேவையான அளவு குப்பை வண்டிகள் இல்லை. சில இடங்களில் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குப்பை எடுக்கப்படுகிறது. தூய்மை பணியாளர்கள் தேவையான அளவு இல்லை. தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் இல்லாமல் கிட்டத்தட்ட 15 வருடமாக குறைவான ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு பணி செய்து கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் இவர்களது கோரிக்கைகளை சட்டமன்றத்தில் பேசுவதாக இருக்கிறேன். தேவைப்பட்டால் மாநில முதல்வரையும் சந்தித்து இது குறித்து முறையிடுவேன் என கூறினார்.

கோவையைப் பொறுத்தவரை நீர்நிலைப் பாதுகாப்பு மற்றும் தூய்மை பணிகளில் ஆர்வமாக பணியாற்றக்கூடிய ஆயிரக்கணக்கான தன்னார்வ தொண்டர்கள் அதிகமாக இருக்கக்கூடிய மாநகரம் இது. மற்ற மாநகரங்களுக்கு உதாரணமாக தன்னார்வத் தொண்டர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த நேரத்தில் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

குன்னூர் சாலை விபத்தை பொறுத்தவரை மாநில நெடுஞ்சாலை துறை அங்குள்ள மாவட்ட நிர்வாகத்தோடு சேர்ந்து அடிக்கடி விபத்து நடக்கக்கூடிய இடங்களில் தகுந்த பாதுகாப்புகளை செய்ய வேண்டும். அவர்களுக்கு வழங்கக்கூடிய நஷ்ட ஈடுகள் அதிகரித்து கொடுக்க வேண்டும் என கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்' என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...