உடுமலை திருமூர்த்தி மலையில் வன உயிரின வார விழா விழிப்புணர்வு

உடுமலைப்பேட்டை வனச்சரகம் திருமூர்த்தி மலையில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் க.கணேஷ்ராம் தலைமையில் சுற்றுலா பயணிகளுக்கு வனம் மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: ஓசோன் படலம் சேதமடையாமல் பாதுகாப்பதன் மூலம் மனிதர்களுக்கு தோல் நோய்கள் மற்றும் இதர நோய்களில் இருந்து காப்பாற்றுகிறது என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.

வன உயிரின வார விழாவை முன்னிட்டு இன்று ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக் கோட்டம் உடுமலைப்பேட்டை வனச்சரகம் திருமூர்த்தி மலையில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் க.கணேஷ்ராம் தலைமையில் சுற்றுலா பயணிகளுக்கு வனம் மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.



இதில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் அவர்கள் கூறியதாவது திருமூர்த்தி அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் பஞ்சலிங்க அருவியானது 2049மீட்டர் உயரத்தில் உள்ள பிச்சிச்சி மலையில் உள்ள சோலைக்காடுகளிலிருந்து உற்பத்தியாகி பல கிளை ஓடைகள் சேர்ந்து பஞ்சலிங்க அருவியாக திருமூர்த்தி மலை வந்தடைந்து மக்களின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

மனித குலத்திற்கு தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்கின்ற சோலைகாடுகளை காப்பாற்றுவது இன்றியமையாத கடமையாகும். மேலும் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் மூலம் வெளியேறும் கார்பன் போன்ற கரிம வாயுக்களை மரங்கள் தங்களின் இலைகளில் சேமித்து வைப்பதன் மூலம் ஓசோன் படலம் சேதமடையாமல் பாதுகாப்பதன் மூலம் மனிதர்களுக்கு தோல் நோய்கள் மற்றும் இதர நோய்களில் இருந்து காப்பாற்றுகிறது.



இதுபோன்ற பல்வேறு பயன்கள் தரும் மரங்களை உருவாக்குவது வன உயிரினங்களே. எனவே வனம் மற்றும் வன உயிரினங்களை காப்பாற்றுவது நமது தலையாய கடமை ஆகும் என்று கூறினார். உடுமலை வனச்சரகர் சிவக்குமார் மற்றும் வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...