வால்பாறையில் கோவில் கட்டிடங்கள், கொய்யா மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் - மக்கள் அச்சம்

வால்பாறை அருகே புது தோட்டம் எஸ்டேட்டில் உள்ள 10 ஏக்கரா பகுதியில் பட்டப்பகலில் இரண்டு காட்டு யானைகள் புகுந்து தோட்டத்தில் இருந்த கொய்யா மரங்களை சேதப்படுத்திவிட்டு அருகில் இருந்த முனீஸ்வரன் கோவில் கட்டிடங்களை இடித்து தள்ளி அட்டகாசத்தில் ஈடுபட்டது.


கோவை: குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் வராதவாறு அடர்ந்த வனப்பகுதிக்குள் அவற்றை விரட்ட வேண்டும் என்று குடியிருப்பு வாசிகள் வனத்துறையினரை கேட்டுக்கொண்டனர்.



வால்பாறை அருகே முனீஸ்வரன் கோவில் கட்டிடங்களையும் குடியிருப்பு அருகில் உள்ள கொய்யா மரங்களையும் காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தயது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீட்டில் வளர்க்கும் தோட்டங்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி வருகிறது.

இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் யானைகளை ஊருக்குள் வராமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் வால்பாறை அருகே புது தோட்டம் எஸ்டேட் பகுதியில் 10 ஏக்கரா பகுதியில் இரண்டு காட்டு யானைகள் பட்டப்பகலில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு அருகில் உள்ள தோட்டத்தில் கொய்யா மரத்தை உடைத்து பழங்களை சாப்பிட்டு கொய்யா மரத்தை வேரோடு தள்ளியது.



அதேபோல் அப்பகுதியில் இருக்கும் முனீஸ்வரன் கோவில் வளாகத்தில் நுழைந்து சுவர் மற்றும் செட் ஆகியவைகளை உடைத்து சேதப்படுத்தியது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை அப்பகுதியில் இருந்து வன பகுதிக்குள் விரட்டினர். காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...