தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம் - பல்லடத்தில் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என பல்லடத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் போல் நடைபெறாமல் இருப்பதால்தான் தற்போது சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது என்று சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன் புகார் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டமன்ற தொகுதியில், அதிமுக சார்பில் வாக்கு சாவடி முகவர்களை நியமிப்பது குறித்து பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்தார்.



இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை பெற வேண்டும்.அதற்கு எவ்வாறு பணி செய்ய வேண்டும். மக்களிடத்தில் அதிமுக ஆட்சியில் செய்த நலத்திட்ட உதவிகளை தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.



இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, கூட்டணி குறித்து கழக பொதுசெயலாளர் முடிவு செய்வார். அதிமுக ஆட்சி காலத்தில் ஒவ்வொரு மாதமும் துறை வாரியாக ஆய்வு கூட்டம் நடத்தினோம். அதில் காவல்துறை தொடர்பான ஆய்வு கூட்டம் நடத்தினோம். அதில் எந்த காவல் நிலையம் பகுதியில் அதிக குற்றங்கள் நிகழ்கிறது என கண்டறிந்து சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்துகளை கேட்டறிந்து அதன் மூலமாக அப்போதைய முதல்வரிடம் எடுத்துரைத்து சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு நடவடிக்கை எடுத்தோம்.

ஆனால் தற்போது இதுபோன்ற ஆய்வு கூட்டங்கள் சரியாக நடைபெறததால் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட தேவையான நடவடிக்களை பொதுச்செயலாளர் ஆலோசனையின்படி மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம் ஆனந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், பரமசிவம் மற்றும் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் பகுதி செயலாளர், உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகர BDDS குழுவினர் மாநில அளவிலான Anti-Sabotage Check போட்டியில் மீண்டும் தங்கப் பதக்கம்

சென்னை ஆவடி R.C.-யில் நடைபெறும் தமிழ்நாடு காவல்துறையின் Anti-Sabotage Check Competition 2026-ல் கோவை மாநகர BDDS குழுவைச்...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...