அண்ணாமலை விரைவில் குணமடைய பிரார்த்தனை - கோவையில் மண்சோறு சாப்பிட்ட பாஜக நிர்வாகிகள்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் குணமடைய வேண்டி கோவை மாவட்ட பாஜகவினர் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மண்சோறு சாப்பிட்டும் அங்கப் பிரதர்ஸ்ணம் செய்தும் வழிபாடு நடத்தினர்.


கோவை: அண்ணாமலை விரைவில் குணமடைய வேண்டி கோவையில் மண்சோறு சாப்பிட்டு பாஜக நிர்வாகிகள் வழிபாடு செய்தனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" நடைபயணம் நடைபெற்று வரும் நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவர் டெல்லி சென்று தேசிய தலைவர்களை சந்தித்து விட்டு சென்னை திரும்பினார். இதனையடுத்து மீண்டும் அவரது நடைப்பயணம் 6ம்தேதி மேட்டுப்பாளையத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக, அண்மையில் தெரிவிக்கப்பட்டது.



இதனால் அண்ணாமலையின் நடை பயணம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ள நிலையில் அண்ணாமலை பூரண குணமடைய வேண்டி கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வசந்தராஜன் ஆலோசனைப்படி தெற்கு மாவட்ட சமூக ஊடக பிரிவு தலைவர் செல்வகுமார், ஆலந்துறை மண்டல தலைவர் ஜோதி ஆகியோர் முன்னிலையில் பாஜக தொண்டர்கள் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மண் சோறு சாப்பிட்டும் கோவில் வளாகத்திற்குள் அங்க பிரதோஷணம் செய்தும் வேண்டிக்கொண்டனர். பின்னர் அண்ணாமலை விரைவில் குணமடைந்து வர வேண்டிய சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...