ஆனைமலையில் மர்மமாக இறந்த ஆண் சிறுத்தை - வனத்துறையினர் தீவிர விசாரணை

பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இறந்து கிடந்த 7 வயது சிறுத்தையின் உடல் வனத்துறையின் உத்தரவுப்படி காட்டுப் பகுதியிலேயே எரியூட்டப்பட்டது.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மர்மமாக இறந்த ஆண் சிறுத்தை குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, போத்தமடை சுற்றுக்கு உட்பட்ட ஐயப்பன் கோவில் பகுதியில், சிறுத்தை ஒன்று, இறந்து கிடப்பதை பார்த்தனர். இதையடுத்து, கள இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், உதவி வனப்பாதுகாவலர் செல்வம் தலைமையில், வனச்சரகர் புகழேந்தி, இயற்கை வரலாறு அறக்கட்டளையை சேர்ந்த திருமலைசாமி, தன்னார்வ அமைப்பை சேர்ந்த ரவிக்குமார் அடங்கிய குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு, கால்நடை டாக்டர் விஜயராகவன் தலைமையிலான மருத்துவ குழுவினர், இறந்த சிறுத்தைக்கு உடற்கூறு ஆய்வு செய்தனர்.

அதில், இறந்தது 7 வயதுள்ள ஆண் சிறுத்தை என்பதும் கண்டறியப்பட்டது. சிறுத்தையின் உடலில், அனைத்து பற்களும், நகங்களும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பிற விலங்குடன் சண்டையிட்டதால், சிறுத்தை இறந்திருக்கலாம் என, வனத்துறையினர் தெரிவித்தனர். அங்கேயே, சிறுத்தையின் உடல் தீயிட்டு எரியூட்டப்பட்டது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...