ஆனைமலையில் மர்மமாக இறந்த ஆண் சிறுத்தை - வனத்துறையினர் தீவிர விசாரணை

பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இறந்து கிடந்த 7 வயது சிறுத்தையின் உடல் வனத்துறையின் உத்தரவுப்படி காட்டுப் பகுதியிலேயே எரியூட்டப்பட்டது.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மர்மமாக இறந்த ஆண் சிறுத்தை குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, போத்தமடை சுற்றுக்கு உட்பட்ட ஐயப்பன் கோவில் பகுதியில், சிறுத்தை ஒன்று, இறந்து கிடப்பதை பார்த்தனர். இதையடுத்து, கள இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், உதவி வனப்பாதுகாவலர் செல்வம் தலைமையில், வனச்சரகர் புகழேந்தி, இயற்கை வரலாறு அறக்கட்டளையை சேர்ந்த திருமலைசாமி, தன்னார்வ அமைப்பை சேர்ந்த ரவிக்குமார் அடங்கிய குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு, கால்நடை டாக்டர் விஜயராகவன் தலைமையிலான மருத்துவ குழுவினர், இறந்த சிறுத்தைக்கு உடற்கூறு ஆய்வு செய்தனர்.

அதில், இறந்தது 7 வயதுள்ள ஆண் சிறுத்தை என்பதும் கண்டறியப்பட்டது. சிறுத்தையின் உடலில், அனைத்து பற்களும், நகங்களும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பிற விலங்குடன் சண்டையிட்டதால், சிறுத்தை இறந்திருக்கலாம் என, வனத்துறையினர் தெரிவித்தனர். அங்கேயே, சிறுத்தையின் உடல் தீயிட்டு எரியூட்டப்பட்டது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...