திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாணவர்களுக்கான கதை, கவிதை, கட்டுரைப்போட்டிகளை நடத்தி மாவட்ட அளவில் சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கி பாராட்டுவது என முடிவு செய்யப்பட்டது.


திருப்பூர்: இலக்கிய அணியின் துணைத் தலைவரும், தலைமைக்கழக பேச்சாளருமான தாரை சிவா தலைமையில் நடைபெற்ற, திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி சார்பில் கலந்தாய்வு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு இலக்கிய அணியின் துணைத் தலைவரும், தலைமைக்கழக பேச்சாளருமான தாரை சிவா தலைமை தாங்கினார்.



அமைப்பாளரும், பூலுவப்பட்டி ஊராட்சி மன்ற தலைவருமான தங்கவேலு வரவேற்புரையாற்றி பொறுப்பாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.



துணை அமைப்பாளர்கள் குண்டடம் ராமசாமி, கொடுவாய் நந்தகுமார், அலங்கியம் கவிஞர்.நிரஞ்சன் என்கிற கிருஷ்ணசாமி, மூங்கில்தொழுவு ஜெகதீசன், முளையாம்பூண்டி அர்ச்சுணன், பொள்ளாச்சி பாலன் ஆகியோர் பேசினார்கள். கூட்டத்தில் தி.மு.க. முன்னாள் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான கதை, கவிதை, கட்டுரைப்போட்டிகளை நடத்தி மாவட்ட அளவில் சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கி பாராட்டுவது என முடிவு செய்யப்பட்டது.

அந்த நிகழ்வுகளில் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரத்தில் சிறப்பாக நடத்துவது, அதே போன்று ஒன்றியம், நகரம் மற்றும் பேரூராட்சி தி.மு.க. இலக்கிய அணி அமைப்பாளர்களை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. முடிவில் நந்தகுமார் நன்றி கூறினார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...