தண்ணீரில் மிதக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி - அச்சப்பட தேவையில்லை என கோவை ஆட்சியர் விளக்கம்

செறிவூட்டப்பட்ட அரிசியை சமைப்பதற்கு தண்ணீரில் ஊறவைக்கும் போது சில அரிசி மிதந்தால் அச்சம் கொள்ள தேவையில்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: செறிவூட்டபட்ட அரிசி தண்ணீரில் மிதந்தால் அச்சப்பட வேண்டாம் என கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார்

மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கடந்த மே மாதம் முதல் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. செறிவூட்டப்பட்ட அரிசியின் விகிதாசாரமானது 1:100 விகிதத்தில் 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி குருணைகளை 100 கிலோ பொது விநியோகத்திட்ட புழுங்கல் மற்றும் பச்சரிசியுடன் கலந்து விநியோகம் செய்யப்படுகிறது.

மாவாக அரைக்கப்பட்ட அரிசியில் இரும்பு சத்து, போலிக் அமிலம், வைட்டமின் -பி12 ஆகியவை கலந்து திரும்ப அரிசி குருணை வடிவில் செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்படுகிறது. செறிவூட்டப்பட்ட அரிசியில் உள்ள இரும்பு சத்தினால் இரத்த சோகையினைத் தடுக்கவும், போலிக் அமிலம் கருவளர்ச்சிக்கும், இரத்த உற்பத்திற்கும், வைட்டமின்-பி12-ல் நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கும் நன்மை ஏற்படுத்துகிறது.

மேற்படி செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்பட்ட பொதுவிநியோகத்திட்ட அரிசி சமைப்பதற்கு தண்ணீரில் ஊற வைக்கும் போது, செறிவூட்டப்பட்ட அரிசி சில தண்ணீரில் மிதப்பதால் பொதுமக்கள் எவரும் அச்சப்பட தேவையில்லை. இவை அடர்த்தி மற்றும் எடை குறைவு காரணமாகதான் மிதக்கின்றன. எனவே, இவை ஊட்டசத்து நிறைந்தவை என்பதால் அனைவரும் பயன்படுத்தலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...