‌நடைபாதை வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் - உடுமலை நகராட்சி வழங்கியது!

பொருளாதாரத்தில் பின்தங்கிய நடைபாதை வியபாரிகள் எழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் வழங்க உடுமலை நகராட்சி சார்பில் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலையில் உள்ள நடைபாதை வியபாரிகளுக்கு நகராட்சி சார்பில் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.

உடுமலை ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் மலிவான விலையில் நாள்தோறும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்று பயன் அடைவதற்கு சிறு மற்றும் சில்லறை வியாபாரிகள் பெரிதும் உதவிகரமாக உள்ளனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய இவர்களுக்கு கைகொடுத்து உதவும் வகையில் அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் உடுமலை நகராட்சி சார்பில் வியாபாரிகளுக்கு வழங்குவதற்காக தள்ளு வண்டிகள் வாங்கப்பட்டு உள்ளது.

இந்த வண்டிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்வு நடைபெற்றது. உடுமலை நகர மன்றத் தலைவர் மத்தீன், நகராட்சி ஆணையாளர் பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் முன்னிலையில் 10 வியாபாரிகளுக்கு வண்டிகள் வழங்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Newsletter

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...