கோவையில் தேவாலயத்தில் புகுந்து தகராறு: 8 பேர் மீது வழக்கு

கோவை ரேஸ்கோர்சில் உள்ள சி.எஸ்.ஐ., தேவாலயத்தில், கடந்த மாதம் 10ம் தேதி நடந்த  அறுவடை விழாவின் போது தகராறில் ஈடுபட்ட 8 பேர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்தனர்


கோவை: கோவை தேவாலயத்தில் புகுந்து தகராறு செய்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.

கோவை ரேஸ்கோர்சில் உள்ள சி.எஸ்.ஐ., தேவாலயத்தில், கடந்த மாதம் 10ம் தேதி அறுவடை விழா நடந்தது

அப்போது, சி.எஸ்.ஐ., தேவாலயத்தின் நிர்வாகிகள் என்று கூறி சிலர், அங்கு நுழைந்து அறுவடை விழாவை நடத்தக்கூடாது என தகராறில் ஈடுபட்டு, பொருட்களை சேதப்படுத்தினர். அங்கிருந்தவர்களை தகாத வார்த்தைகள் திட்டி தாக்க முயன்றனர்.

அறுவடை விழாவிற்காக பொதுமக்கள் நன்கொடையாக வழங்கிய ரூ.10 லட்சம் மற்றும் தங்க நாணயங்களை திருடி சென்றனர். இதுகுறித்து, கிறிஸ்தவ மத போதகர் பிரபு டேனியல், கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.

ரேஸ்கோர்ஸ் போலீசார், டேவிட் சாலமன், 50, ராபின்சன் சாலமன், 45, பரணபாஸ் வசந்தகுமார், 49, பிரபாகரன், 48, நித்தா, 43, கிரேஸ், 45, ராஜ் சுகுமார், 48நித்தா, 43, கிரேஸ், 45, ராஜ் சுகுமார், 48, ஜோஸ்வா, 47 ஆகிய எட்டு பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...