அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் மிதிவண்டி போட்டிகள் - தேதி அறிவிப்பு

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் வருகின்ற 14ஆம் தேதி கோவையில் மிதிவண்டி போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் நடைபெறும் மிதிவண்டி போட்டிகளில் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற 14ஆம் தேதி காலை 8 மணிக்கு அண்ணா மிதிவண்டி போட்டிகள் கோவை புதூர் மின்வாரிய அலுவலகம் முன்பு துவங்கி ஆர்டிஓ அலுவலகம், CBM கல்லூரி வழியாகச் சென்று மீண்டும் மின்வாரிய அலுவலகம் வந்தடையும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்.

இப்போட்டிகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோவை மாவட்ட பிரிவு மூலம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோமீட்டர் மாணவியர்களுக்கு 10 கிலோமீட்டர், 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோமீட்டர் மாணவியர்களுக்கு 15 கிலோமீட்டர், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோமீட்டர் மாணவியர்களுக்கு 15 கிலோமீட்டர் என நடத்தப்பட உள்ளதாகவும், போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவிகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் கையொப்பமிட்ட வயது சான்றிதழ் ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல்களை 13ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் மாணவ மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000 இரண்டாம் பரிசாக ரூ. 3000, மூன்றாம் பரிசாக ரூ. 2000, நான்கு முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு ரூ. 250 ரூபாய் மதிப்பிலான பரிசுகளும், தகுதி சான்றிதழ்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...