உடுமலை நாராயண கவிராயர் மணிமண்டபத்தில் கூடுதல் புத்தகங்கள் வைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

நாராயணகவி மணிமண்டபத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களின் நலன் கருதி புத்தகங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அதே போன்று போட்டித் தேர்வில் வெற்றி பெற்று செல்லும் தேர்வர்கள் புத்தகங்களை வாங்கி கொடுத்து உதவ வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: போட்டித் தேர்வு புத்தகங்கள் பற்றாக்குறை, செய்தித்தாள்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

உடுமலை குட்டை திடலில் நாராயணகவி மணிமண்டபம் உள்ளது. குறிப்புதவி நூலகமான இங்கு போட்டி தேர்வுக்கு தயாராகும் வகையில் பொது அறிவு, நடப்பு நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

இங்கு நாள்தோறும் ஏராளமான போட்டித் தேர்வர்கள் வருகை தந்து குறிப்பு எடுத்து தயாராகி வருகின்றனர். ஆனால் போட்டித் தேர்வு புத்தகங்கள் பற்றாக்குறை, செய்தித்தாள்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் முழுமூச்சில் தேர்வு தயராக இயலாத நிலை உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மக்களுக்கு சேவையாற்ற அரசுப்பணியில் அமர வேண்டும் என்ற நோக்கத்தோடு முழுமூச்சாக தேர்வர்கள் தயாராகி வருகின்றனர்.

ஆனால் தற்போதைய நிலையில் சுமார் 2 ஆயிரம் புத்தகங்களே உள்ளது. போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றால் பல்வேறு தலைப்புகளில் 5 ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் இருக்க வேண்டும். புத்தகங்கள் பற்றாக்குறையாக இருப்பதால் தேர்வில் பின்னடைவை சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி நாராயணகவி வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் எழுதிய புத்தகங்கள் சொற்ப அளவில் மட்டுமே உள்ளது. அதையும் அதிக படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கான சிறுகதை புத்தகங்கள் முற்றிலுமாக இல்லை. அதுமட்டுமின்றி நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொள்ளும் வகையில் செய்தித்தாள்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியதும் அவசியமாகும். எனவே நாராயணகவி மணிமண்டபத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களின் நலன் கருதி புத்தகங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அதே போன்று போட்டித் தேர்வில் வெற்றி பெற்று செல்லும் தேர்வர்கள் புத்தகங்களை வாங்கி கொடுத்து உதவ வேண்டும். இதனால் இளைய தலைமுறையினர் பயன் பெறுவதற்கு எதுவாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

Newsletter

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...