ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு - கோவை ஆட்சியர்

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் மையநிர்வாகி, முதுநிலைஆலோசகர், வழக்குபணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.


கோவை: தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியாற்ற அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) ல் ஒப்பந்த அடிப்படையில் மையநிர்வாகி, முதுநிலைஆலோசகர், வழக்குபணியாளர், தகவல் தொழில் நுட்ப பணியாளர், பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதற்கான விண்ணப்பங்கள் கோயம்புத்தூர் மாவட்ட இணையதள முகவரி https://coimbatorenic.in யில் உரிய படிவம் மற்றும் பணியிடம் மற்றும் தகுதிகள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நகஅலுவலகம், மாவட்டஆட்சியரகம், பழைய கட்டிடம், தரைத்தளம், கோயம்புத்தூர்- 641018. தொலைபேசிஎண்- 0422 2305126 என்ற முகவரிக்கு 30.10.2023 அன்று மாலைக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...