ஆப்ரேஷன் அஜய் திட்டத்தில் இஸ்ரேலில் இருந்து கோவை திரும்பியவர்கள் மத்திய அரசுக்கு நன்றி

இஸ்ரேலில் யாராவது சிக்கியிருந்தால் அரசு அறிவித்த உதவி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: ஆப்ரேஷன் அஜய் மூலம் இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பிய கோவையைச் சேர்ந்தவர்களை அம்மாவட்ட ஆட்சியர் விமானநிலையம் சென்று வரவேற்றார்.

இஸ்ரேல் போர் சூழலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் ஆப்ரேஷன் அஜய் எனும் திட்டத்தின் மூலம் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முதற்கட்டமாக இஸ்ரேலில் இருந்து 221 இந்தியர்கள் மீட்கப்பட்டு தாய்நாடு திரும்பியுள்ளனர்.



அவர்களில் ஏழு பேர் இன்று கோவை விமான நிலையம் வந்தடைந்தனர்.



அவர்களை கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி விமான நிலையத்தில் வரவேற்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர்,



'இஸ்ரேலில் இருந்த கோவை, நாமக்கல், கரூர், நீலகிரி பகுதிகளை சேர்ந்த 7 பேர் கோவைக்கு வந்துள்ளனர்.

இவர்கள் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து கோவைக்கு 2 பெண்கள் உட்பட மொத்தம் 7 பேர் விமானம் மூலம் கோவை வந்துள்ளனர். இவர்களில் சிலர் மாணவர்கள் ஆகும்.

அதில் 2 பேர் கோவையை சேர்ந்தவர்கள். கோவையை சேர்ந்தவர்களை அழைத்து செல்ல அவர்களது பெற்றோர்கள் வந்துள்ளனர். மற்ற பகுதிகளுக்கு செல்பவர்களுக்கு

வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அங்குள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் நாடு திரும்பியுள்ளனர். இஸ்ரேலில் பிரச்சனை முடிந்த பின்னர் இவர்கள் அங்கு செல்லலாம்.

இஸ்ரேலில் யாராவது இருந்தால் அரசு அறிவித்த உதவி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். அவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தார். மத்திய அரசின் ஆப்ரேஷன் அஜய் திட்டம் மிக விரைவாகவும் சிறப்பாகவும் செயல்படுத்தப்பட்டு, போர் சூழலில் இருந்த தங்களை மத்திய அரசும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் சிறப்பாக செயல்பட்டு மீட்டுள்ளதாகவும்.

இதற்காக மத்திய அரசுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பியவர்களும், அவர்களது உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...