வாகன பதிவெண்களை துல்லியமாக படம்பிடிக்கும் அதிநவீன கேமிரா தொழில்நுட்பம் அறிமுகம்

குற்றம் நடக்கும் நேரத்திலேயே வாகனங்களை பின் தொடரும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: வாகன பதிவெண்களை துல்லியமாக காட்டும் அதிநவீன கேமரா தொழில்நுட்பம் கோவையில் நடைமுறைக்கு வந்தது.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை சுற்றி 5 கிலோமீட்டர் தொலைவில் "அதிநவீன சிசிடிவி கேமரா" தொழில்நுட்பம் தொடர்பான அறிமுக விழா நடைபெற்றது.



இதில், மாநகர காவல் வடக்கு துணை ஆணையர் சந்தீஷ், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவாணீஷ்வரி, துணை தலைவர் சரவண சுந்தர், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கும், காவல் அதிகாரிகளுக்கும் இந்த அதிநவீன கேமரா தொடர்பான தகவல்களை விளக்கினார். முதற்கட்டமாக, அரசு அலுவலகங்களை மையப்படுத்தி ரூபாய் 34 லட்சம் மதிப்பில் 110 அதிநவீன கேமரா தொழில்நுட்பம் முக்கியமான இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது.



இந்த கேமரா எவ்வாறு உதவியாக இருக்கும், எப்படி செயல்படுகிறது என்பது குறித்து பெரிய திரையில் விளக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,



அரசு அலுவலகங்களை மையப்படுத்தி சக்திவாய்ந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இந்த வாகனங்களின் பதிவெண்களை தெளிவாக எடுக்கும் வகையிலும், இரவு நேரங்களில் அடையாளம் காணக்கூடிய வகையிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், கேமராக்களின் பதிவுகள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்பாடும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும் என்றார்.

மேலும், குற்றம் நடக்கும் நேரத்திலேயே வாகனங்களை பின் தொடருதல், குழந்தைகள், வயதானவர்கள் காணாமல் போனால், அவர்களின் உடை மூலம் உடனடியாக கண்டறியவும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அதுமட்டுமின்றி முகங்களில் ஏற்கனவே பதிவான குற்றவாளிகளின் முகங்கள் தென்பட்டால் அதையும் ஒரே நேரத்தில் இந்த திரையில் காட்டும் வகையில் தொழில்நுட்பம் உள்ளதாகவும் கூறியவர், அடுத்தக்கட்டமாக 100 கேமராக்கள் அடுத்த ஓராண்டில் பொறுத்த திட்டமிட்டுள்ளாதாகவும், குற்றத்தை தடுப்பதற்கும், குற்றவாளிகளை பிடிப்பதற்கும் இந்த கேமராவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் என்றார்.

தற்போது வரை கோவை மாநகர காவல்துறையில் 25,000 கேமராக்களில் 14,800 கேமராக்கள் சாலையை நோக்கி பொருத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது இந்த அதிநவீன கேமராக்களின் பதிவுகள் ஒரு மாதம் வரை வைத்துக்கொள்ளும் வசதி கொண்டதாகவும், ஏற்கனவே, சோதனை முயற்சியின் போது 2 வழக்குகள் கண்டறியப்பட்டு உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

Newsletter

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...