வாகன பதிவெண்களை துல்லியமாக படம்பிடிக்கும் அதிநவீன கேமிரா தொழில்நுட்பம் அறிமுகம்

குற்றம் நடக்கும் நேரத்திலேயே வாகனங்களை பின் தொடரும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: வாகன பதிவெண்களை துல்லியமாக காட்டும் அதிநவீன கேமரா தொழில்நுட்பம் கோவையில் நடைமுறைக்கு வந்தது.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை சுற்றி 5 கிலோமீட்டர் தொலைவில் "அதிநவீன சிசிடிவி கேமரா" தொழில்நுட்பம் தொடர்பான அறிமுக விழா நடைபெற்றது.



இதில், மாநகர காவல் வடக்கு துணை ஆணையர் சந்தீஷ், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவாணீஷ்வரி, துணை தலைவர் சரவண சுந்தர், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கும், காவல் அதிகாரிகளுக்கும் இந்த அதிநவீன கேமரா தொடர்பான தகவல்களை விளக்கினார். முதற்கட்டமாக, அரசு அலுவலகங்களை மையப்படுத்தி ரூபாய் 34 லட்சம் மதிப்பில் 110 அதிநவீன கேமரா தொழில்நுட்பம் முக்கியமான இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது.



இந்த கேமரா எவ்வாறு உதவியாக இருக்கும், எப்படி செயல்படுகிறது என்பது குறித்து பெரிய திரையில் விளக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,



அரசு அலுவலகங்களை மையப்படுத்தி சக்திவாய்ந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இந்த வாகனங்களின் பதிவெண்களை தெளிவாக எடுக்கும் வகையிலும், இரவு நேரங்களில் அடையாளம் காணக்கூடிய வகையிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், கேமராக்களின் பதிவுகள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்பாடும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும் என்றார்.

மேலும், குற்றம் நடக்கும் நேரத்திலேயே வாகனங்களை பின் தொடருதல், குழந்தைகள், வயதானவர்கள் காணாமல் போனால், அவர்களின் உடை மூலம் உடனடியாக கண்டறியவும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அதுமட்டுமின்றி முகங்களில் ஏற்கனவே பதிவான குற்றவாளிகளின் முகங்கள் தென்பட்டால் அதையும் ஒரே நேரத்தில் இந்த திரையில் காட்டும் வகையில் தொழில்நுட்பம் உள்ளதாகவும் கூறியவர், அடுத்தக்கட்டமாக 100 கேமராக்கள் அடுத்த ஓராண்டில் பொறுத்த திட்டமிட்டுள்ளாதாகவும், குற்றத்தை தடுப்பதற்கும், குற்றவாளிகளை பிடிப்பதற்கும் இந்த கேமராவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் என்றார்.

தற்போது வரை கோவை மாநகர காவல்துறையில் 25,000 கேமராக்களில் 14,800 கேமராக்கள் சாலையை நோக்கி பொருத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது இந்த அதிநவீன கேமராக்களின் பதிவுகள் ஒரு மாதம் வரை வைத்துக்கொள்ளும் வசதி கொண்டதாகவும், ஏற்கனவே, சோதனை முயற்சியின் போது 2 வழக்குகள் கண்டறியப்பட்டு உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

Newsletter

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...