கோவை மேம்பாலத்திற்கு அடியில் சிக்கிய கண்டெய்னர் லாரி - போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட வாகனங்கள்

மேம்பாலத்தில் அடியில் சிக்கிக்கொண்ட கண்டெய்னர் லாரியால் ஏற்பட்ட நெரிசலில் அந்த வழியாக நோயாளியை ஏற்றிவந்த ஆம்புலன்சும் செல்ல வழியில்லாமல் மாட்டிக்கொண்டது.


கோவை: மேம்பாலத்தில் அடியில் சிக்கிக்கொண்ட கண்டெய்னர் லாரியால் ஏற்பட்ட நெரிசலில் அந்த வழியாக நோயாளியை ஏற்றிவந்த ஆம்புலன்சும் செல்ல வழியில்லாமல் மாட்டிக்கொண்டது.

கோவை மாவட்டம் துடியலூரில் இருந்து கேரளா நோக்கி டீ தூள் ஏற்றிக்கொண்டு பெரிய கண்டைனர் லாரி ஒன்று ஆத்துப்பாலம் சந்திப்பு வழியே சென்று கொண்டிருந்தது. அந்தப்பகுதியில் நீண்ட காலமாக மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் லாரியில் இருந்த கண்டெய்னர் உயரம், கட்டப்பட்டு வரும் பாலத்தின் உயரத்தின் அளவிற்கு இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக சிக்கிக் கொண்டது. பல்வேறு முக்கிய சாலைகளை இணைக்கக்கூடிய சந்திப்பு ஆத்துப்பாலம் என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொள்ளாச்சி நோக்கி செல்லும் சாலையிலும், பாலக்காடு நோக்கி செல்லும் சாலையிலும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனை அடுத்து அங்கிருந்த பொதுமக்களே நெரிசலை கட்டுக்குள் கொண்டுவந்து, அந்த நெரிசலில் நோயாளிகளை ஏற்றுக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ்களுக்கு வழிகளை சீர் செய்து கொடுத்து ஒழுங்குபடுத்தினர்.

பின்னர் வந்த போக்குவரத்து காவல் துறையினர் நெரிசலை சீர் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இப்பகுதி வழியே வந்ததால் வாகன நெரிசலால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். வழக்கமாகவே இப்பகுதி வழியே பள்ளி கல்லூரி வாகனங்கள் முகூர்த்த நாட்களில் அதிகளவு போக்குவரத்து இருப்பதால் மேம்பால வேலைகளை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...