உடுமலை அருகே சாவடியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் பேருந்துக்காக காத்திருந்த 3 பேர் உயிரிழப்பு

உடுமலை அருகே கூலி தொழிலாளர்கள் பேருந்துக்காக சாவடி அருகே காத்து இருந்த போது மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பூர்: உடுமலைப்பகுதிகளில் நேற்றிரவு முதல் செய்த தொடர் மழையால் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கலாம் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள மடத்துக்குளம் கொழுமம் ஊராட்சி பகுதியில் உள்ள சாவடி எனப்படும் தங்கும் விடுதி உள்ளது. இந்தப் பகுதியில் கூலித் தொழிலாளர்கள் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக சாவடி அருகே பழனி செல்லும் பேருந்துக்காக காத்து இருந்தனர்.



அப்போது எதிர்பாராத விதமாக சாவடியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கூலி தொழிலாளர்கள் மணிகண்டன் (28), கௌதம்(29), முரளி ராஜன்(35) ஆகியோர் படுகாயம் அடைந்து உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உடுமலை அரசு மருத்துவமனையில் மூவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.



நேற்று நள்ளிரவு முதல் இப்பகுதியில் கனமழை பெய்த காரணத்தால் சாவடியின் மேற்கூரை இடிந்து விழுந்து இருக்கலாம் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உடுமலை அருகே கூலி தொழிலாளர்கள் பேருந்துக்காக சாவடி அருகே காத்து இருந்த போது மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...