குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தால் தகவல் அளிக்க வேண்டும் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவுரை

கோவை மாநகராட்சி பகுதிகளில்‌ குடிநீரில்‌ கழிவு நீர்‌ கலந்து வருவது தெரியவந்தால்‌ உடனடியாக மாநகராட்சி நகர்நல அலுவலர்‌ கைபேசி எண்‌ - 94435 38765 மற்றும்‌ உதவி எண்‌: 0422-2302323 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தகவல்‌ தெரிவிக்குமாறு ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ கேட்டுக்கொண்டுள்ளார்.


கோவை: பிரதான குழாய்கள்‌ மற்றும்‌ வீடுகளுக்கு வழங்கப்படும்‌ இணைப்பு குழாய்கள்‌ ஆகியவற்றில்‌ பழுது ஏற்பட்டால்‌ அல்லது நீர்‌ கசிவு ஏற்பட்டு அதன்வழியாக கழிவு நீர் குடிநீருடன்‌ கலக்கும்‌ சூழ்நிலை ஏற்படுவதாக மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி பகுதிகளில்‌ 24x7 குடிநீர் திட்டப்பணிகள்‌ மற்றும்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌ நடைபெற்றுவருகிறது. அவ்வப்போது நடைபெறும்‌ குடிநீர்‌ கசிவுகளும்‌ உடனடியாக சரிசெய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள்‌ பயன்படுத்தும்‌ குடிநீர் குழாய்கள்‌, வணிக நிறுவனங்கள்‌, கல்வி நிறுவனங்கள்‌ பயன்படுத்தும்‌ குடிநீர்‌ இணைப்புகள்‌, பிரதான குழாய்கள்‌ மற்றும்‌ வீடுகளுக்கு வழங்கப்படும்‌ இணைப்பு குழாய்கள்‌ ஆகியவற்றில்‌ பழுது ஏற்பட்டால்‌ அல்லது நீர்‌ கசிவு ஏற்பட்டு அதன்வழியாக கழிவு நீர் குடிநீருடன்‌ கலக்கும்‌ சூழ்நிலை ஏற்படுகிறது.

இதனால்‌ பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. குடிநீர்‌ விநியோகம்‌ செய்யும்போது கழிவு கலந்து விநியோகம்‌ செய்யும்‌ சூழ்நிலையும்‌ ஏற்படுகிறது. மேலும்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்காக குடிநீரை சேமித்து வைக்கப்‌ பயன்படுத்தும்‌ கீழ்நிலை மற்றும்‌ மேல்நிலை நீர்தேக்கத்‌ தொட்டிகளை அவ்வப்போது சுத்தம்‌ செய்து பயன்படுத்தவும்‌ பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

பொதுமக்கள்‌ பயன்படுத்தும்‌ குடிநீரில்‌ கழிவு நீர்‌ கலந்து வருவது தெரியவந்தால்‌ உடனடியாக கீழ்கண்ட மாநகராட்சி குடிநீர் விநியோக உதவி பொறியாளர்களை தொடர்பு கொள்ளவும்‌. மேலும்‌, மாநகராட்சி நகர்நல அலுவலர்‌ கைபேசி எண்‌ - 94435 38765, உதவி எண்‌: 0422-2302323 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தகவல்‌ தெரிவிக்குமாறு பொதுமக்களை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ கேட்டுக்கொண்டுள்ளார்‌.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...