குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தால் தகவல் அளிக்க வேண்டும் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவுரை

கோவை மாநகராட்சி பகுதிகளில்‌ குடிநீரில்‌ கழிவு நீர்‌ கலந்து வருவது தெரியவந்தால்‌ உடனடியாக மாநகராட்சி நகர்நல அலுவலர்‌ கைபேசி எண்‌ - 94435 38765 மற்றும்‌ உதவி எண்‌: 0422-2302323 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தகவல்‌ தெரிவிக்குமாறு ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ கேட்டுக்கொண்டுள்ளார்.


கோவை: பிரதான குழாய்கள்‌ மற்றும்‌ வீடுகளுக்கு வழங்கப்படும்‌ இணைப்பு குழாய்கள்‌ ஆகியவற்றில்‌ பழுது ஏற்பட்டால்‌ அல்லது நீர்‌ கசிவு ஏற்பட்டு அதன்வழியாக கழிவு நீர் குடிநீருடன்‌ கலக்கும்‌ சூழ்நிலை ஏற்படுவதாக மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி பகுதிகளில்‌ 24x7 குடிநீர் திட்டப்பணிகள்‌ மற்றும்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌ நடைபெற்றுவருகிறது. அவ்வப்போது நடைபெறும்‌ குடிநீர்‌ கசிவுகளும்‌ உடனடியாக சரிசெய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள்‌ பயன்படுத்தும்‌ குடிநீர் குழாய்கள்‌, வணிக நிறுவனங்கள்‌, கல்வி நிறுவனங்கள்‌ பயன்படுத்தும்‌ குடிநீர்‌ இணைப்புகள்‌, பிரதான குழாய்கள்‌ மற்றும்‌ வீடுகளுக்கு வழங்கப்படும்‌ இணைப்பு குழாய்கள்‌ ஆகியவற்றில்‌ பழுது ஏற்பட்டால்‌ அல்லது நீர்‌ கசிவு ஏற்பட்டு அதன்வழியாக கழிவு நீர் குடிநீருடன்‌ கலக்கும்‌ சூழ்நிலை ஏற்படுகிறது.

இதனால்‌ பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. குடிநீர்‌ விநியோகம்‌ செய்யும்போது கழிவு கலந்து விநியோகம்‌ செய்யும்‌ சூழ்நிலையும்‌ ஏற்படுகிறது. மேலும்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்காக குடிநீரை சேமித்து வைக்கப்‌ பயன்படுத்தும்‌ கீழ்நிலை மற்றும்‌ மேல்நிலை நீர்தேக்கத்‌ தொட்டிகளை அவ்வப்போது சுத்தம்‌ செய்து பயன்படுத்தவும்‌ பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

பொதுமக்கள்‌ பயன்படுத்தும்‌ குடிநீரில்‌ கழிவு நீர்‌ கலந்து வருவது தெரியவந்தால்‌ உடனடியாக கீழ்கண்ட மாநகராட்சி குடிநீர் விநியோக உதவி பொறியாளர்களை தொடர்பு கொள்ளவும்‌. மேலும்‌, மாநகராட்சி நகர்நல அலுவலர்‌ கைபேசி எண்‌ - 94435 38765, உதவி எண்‌: 0422-2302323 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தகவல்‌ தெரிவிக்குமாறு பொதுமக்களை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ கேட்டுக்கொண்டுள்ளார்‌.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...