கோவையில் வரும் 19 ஆம் தேதி மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி

கோவை எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரியில் வரும் 19 ஆம் தேதி மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழ் கனவு நிகழ்ச்சியில் "ஈதல் இசைபட வாழ்தல்” என்னும் பொருண்மையில் எழுத்தாளர் நந்தலாலா, சொற்பொழிவாளர், கருத்துகளை எடுத்துரைக்க உள்ளார்.

கோவை எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரியில் வரும் 19 ஆம் தேதி மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நான்காவது நிகழ்வாக வரும் 19.10.2023 அன்று காலை 09.00 மணிக்கு எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப (Dr. SNS College of Technology) கல்லூரியில் நடைபெறும் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் ஈதல் இசைபட வாழ்தல் என்னும் பொருண்மையில் எழுத்தாளர். திருமிகு நந்தலாலா, சொற்பொழிவாளர், அவர்கள் கருத்துகளை எடுத்துரைக்க வருகைதரவுள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, தமிழ்ப் பெருமிதம் ஆகிய இரு கையேடுகள் வழங்கப்படவுள்ளது.

மேலும், மாணவர்களுக்கு உதவும் வகையில் புத்தகக்காட்சி, 'நான் முதல்வன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்டத் தொழில் மையம். தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை, சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் போன்ற அரங்குகள் அமைக்கப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...