கோவையில் புதியதாக கட்டப்பட்ட சிறுவர் பூங்கா சுற்றுச்சுவர் - எம் பி நடராஜன் திறந்து வைத்தார்

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட முத்து நகர் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் ரூ.16 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா சுற்றுச் சுவரினை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


கோவை: கோவையில் சிறுவர் பூங்காவின் சுற்றுச்சுவரை திறந்து வைத்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை நாடாளுமன்ற உறுப்பினர் பெற்றுக்கொண்டார்.

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட முத்து நகர் பகுதியில் நாடாளு உறுப்பினர் நிதியில் ரூ.16 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா சுற்றுச் சுவரினை கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதே போல் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி 13-வது வார்டு எம்.ஆர்.ஜி நகர் புதிய ரேசன்கடையில் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் பேரூராட்சி தலைவர் மரகதம் வீரபத்திரன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினர்.



கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட வது 9வார்டு முத்துநகர் பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா மற்றும் கோவில் பகுதியில் அதற்கான சுற்றுச் சுவர் அமைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பி ஆர் நடராஜன் மத்திய அரசின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 16 லட்சம் ஒதுக்கி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.



இதன் திறப்பு விழாவானது நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியின் தலைவர் மரகதம் வீரபத்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.

சிறுவர் பூங்கா சுற்றுச் சுவற்றினை பாராளுமன்ற உறுப்பினர் பி ஆர் நடராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பி ஆர் நடராஜனுக்கு முத்துநகர் பொதுநல சங்கத்தின் தலைவர் ஹரிஹரன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.



இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் ராமதாஸ், செயலாளர் தேவராஜ், ஆலோசகர் பாஸ்கரன், ஆலய பொறுப்பாளர் ஜெயப்பிரகாஷ், ஸ்ரீதரன், வார்டு உறுப்பினர் சித்ரா மற்றும் முத்து நகர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் சுந்தரராஜன் நன்றியுரை வழங்கினார்.



அதேபோல் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி 13-வது வார்டு எம்.ஆர்.ஜி நகர் புதிய ரேசன்கடையில் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் பேரூராட்சி தலைவர் மரகதம் வீரபத்திரன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் தலைமை பொதுகுழு உறுப்பினர் வீரபத்திரன், துணைத் தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...