துடியலூர் அருகே மான்குட்டியை விழுங்கிய மலைப்பாம்பு - பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்ட தீயணைப்புத்துறையினர்

கோவை துடியலூரை அடுத்த ராக்கிபாளையம் பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையத்தில் மான் குட்டியை விழுங்கி விட்டு நகர முடியாமல் இருந்த மலைப் பாம்பை பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்புத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.


கோவை: மான் குட்டியை விழுங்கி விட்டு நகர முடியாமல் இருந்த மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.

கோவை துடியலூரை அடுத்த ராக்கிபாளையம் பகுதியில் சி.ஆர்.பி.எப். எனும் மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் நேற்று இந்த பயிற்சி மையத்தின் வளாகத்தில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு ஒன்று இரையை விழுங்கிவிட்டு நகர முடியாமல் கிடந்துள்ளது.

இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.



அங்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் மலைப் பாம்பை லாவகமாக பிடித்தனர். அப்போது அந்த பாம்பு குட்டி மானை விழுங்கியிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.

Newsletter

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...