தாராபுரத்தில் அனுமதியின்றி பட்டாசு கடைகள் அமைப்பு - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தாராபுரம் வட்டாரப் பகுதியில் அரசு விதித்துள்ள எந்தொரு விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் பட்டாசு கடைகள் அமைக்கும் பணியில் தனியார் கடை உரிமையாளர்கள் தீவிரம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: அண்மைகாலமாக ஏற்படும் பட்டாசு விபத்துக்களை கருத்தில் கொண்டு அனுமதியில்லாமல் அமைக்கும் கடைகளை அரசு அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் தாராபுரம் வட்டார பகுதியில் பட்டாசு கடைகள் நடத்த தனியார் கடை உரிமையாளர் ஆங்காங்கே தற்காலிக செட் அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஆண்டு தோறும் 8 கடைகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் தாராபுரம் வட்டார பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அனுமதியில்லாமல் நடத்தி வருவதாக சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

அதுவும் குடியிருப்புகள், பெட்ரோல் பங்குகள், கோவில்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பட்டாசு கடை நடத்த அனுமதி இல்லை. ஆனால் மேற்கூறிய பகுதிகளில் அதிகமாக கடை நடைபெற்று வருகிறது. தற்காலிக பட்டாசு கடை அமைக்க தீயணைப்பு துறையினர், போலீஸ் துறையினர், வருவாய் துறையினர் ஆகியோர் பரிந்துரை செய்த பின்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனுமதி பெற்ற பிறகு கடை அமைக்க வேண்டும்.

அப்போது அரசு விதிமுறைகள் பின்பற்ற தேவையான தீ அணைப்பு கருவிகள் வைத்திருக்க வேண்டும். ஆனால் தற்காலிக கடை உரிமையாளர் எந்த நடைமுறைகளையும் கடைபிடிப்பது இல்லை. சமீபத்தில் பட்டாசு ஆலைகளில் பட்டாசு வெடித்து பலர் இறந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் பட்டாசு கடை அமைக்க அனுமதி வழங்கும் கடைகளில் சீன பட்டாசுகளை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும், அனுமதியில்லாத கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சமீபத்தில் தமிழக-கர்நாடக எல்லையில் பட்டாசுகளை வாகனங்களில் இருந்து இறக்கி வைக்கும் போது பட்டாசுகள் வெடித்து பலர் உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...