ஊராட்சி சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் - ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு

கோவை குருடம்பாளையம் ஊராட்சி மற்றும் ஏ.எல்.ஆரோக்யா முதுகு தண்டுவட சிகிச்சை மையம் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.


கோவை: குருடம்பாளையம் ஊராட்சி சார்பில் எலும்பு தேய்மானம், கழுத்து வலி, இடுப்பு வலி, கால் முட்டி வலி, உள்ளிட்ட உபாதைகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோவை குருடம்பாளையம் ஊராட்சி மற்றும் ஏ.எல்.ஆரோக்யா முதுகு தண்டுவட சிகிச்சை மையம் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாமை ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடத்தினர். இதில் சுற்றுப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலர் பங்கேற்று பயன்பெற்றனர்.



கோவை குருடம்பாளையம் ஊராட்சி மற்றும் ஏ.எல்.ஆரோக்யா முதுகு தண்டுவட சிகிச்சை மையம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாமை ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமை குருடம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் டி.ரவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் வசந்தாமணி முன்னிலை வகித்தார்.



இதில் ஏ.எல்.ஆரோக்யா முதுகு தண்டுவட சிகிச்சை மைய மருத்துவர்கள் பாரதி, முத்துக்குமார் ஆகியோர் எலும்பு தேய்மானம், கழுத்து வலி, இடுப்பு வலி, கால் முட்டி வலி, கால்பாத உணர்ச்சி இன்மை, கால்பாத எரிச்சல், இடுப்பு ஜவு விலகல் உள்ளிட்ட நோய்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கினர்.



மேலும் முகாமில் இலவசமாக பல் பரிசோதனை, கண் பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல் ரூபாய் 1500 மதிப்பு எலும்பு சத்து பரிசோதனை 50 ரூபாய்க்கு மேற்கொள்ளப்பட்டது.

இந்த முகாமில் ஏ.எல்.ஆரோக்யா முதுகு தண்டுவட சிகிச்சை மையம், துடியலூர் லட்சுமி மருத்துவ மனை, வாசன் ஐ கேர், பி.வி.கே. டெண்டல் கேர், மற்றும் துளசி பார்மஸி உள்ளிட்ட மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்று நோயாளிகளுக்கு மருத்து ஆலோசனைகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி கவுன்சிலர் வளர்மதி, உள்பட சுற்றுப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலர் பங்கேற்று பயன்பெற்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...