கோவையில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 15 வருடம் சிறைத்தண்டனை

கோவையில் கடந்த 2006ஆம் ஆண்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 15 வருட சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கோவை: பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒரு குற்றவாளி உயிரிழந்துவிட்ட நிலையில், மற்றொரு குற்றவாளிக்கு 15 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ரங்கசாமி மகன் முருகேசன் (27) மற்றும் முத்து மகன் சுப்பிரமணி (43) ஆகியோர் கடந்த 2006-ம் ஆண்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முருகேசன் மற்றும் சுப்ரமணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கோவை மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்து பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான முருகேசன் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் மற்றொரு குற்றவாளியான சுப்பிரமணிக்கு 15 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 2000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். வழக்கினை புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் உஷா ஆஜர்படுத்தினார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...