கோவை யு.டி.எஸ் நிதி நிறுவனம் மோசடி - ஏமார்ந்த 200க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளிப்பு

யுனிவர்சல் டிரேடிங் சொலிசன் என்ற நிதி நிறுவனத்தில் பணம் தெலுத்தி ஏமாந்தவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கோவையில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலக வளாகத்தில் மனு அளிக்க குவிந்தனர்.


கோவை: நாங்கள் உழைத்து சம்பாரித்து சிறுக, சிறுக சேமித்த பணத்தை இழந்து தவித்து வருகிறோம் என்று கோவை யு.டி.எஸ் நிதி நிறுவனத்தில் பணத்தை கட்டி ஏமாந்தவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

யுனிவர்சல் டிரேடிங் சொலிசன் என்ற நிதி நிறுவனம் தமிழகம் முழுவதும் அதிக லாபம் மற்றும் வட்டி தருவதாக போலியான வாக்குறுதிகளை அளித்து தமிழ்நாடு முழுவதும் சுமார் 75 ஆயிரம் பேரிடம் சுமார் 1300 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. இதுதொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் தகுந்த ஆதாரத்துடன் புகாரளிக்க காவல்துறை தரப்பில் அறிவுறுத்தியிருந்தனர்.



இதனால் கோவையில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலக வளாகத்தில் 200 க்கும் மேற்பட்டவர்கள் மனு அளிக்க குவிந்தனர்.



இது குறித்து பணம் இழந்தவர்கள் கூறுகையில், காவல்துறையுனரின் வழிகாட்டுதலில் ஏற்கனவே புகாரளித்த நிலையில் மீண்டும் புகாரளிக்க வந்ததாகவும் இந்த நிதி நிறுவன மோசடி தொடர்பாக ஏற்கனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தி நிவாரணம் வழங்குவதாக தெரிவித்தனர், ஆனால் எந்த நிவாரணமும் வழங்கவில்லை எனவும் அந்த குழுவையும் கலைத்து விட்டார்கள் எனவும் தெரிவித்தனர். நாங்கள் உழைத்து சம்பாரித்து சிறுக,சிறுக சேமித்த பணத்தை இழந்து தவித்து வருகிறோம். நிதி நிறுவனத்தின் பேரில் பல்வேறு இடங்க்களில் ஏக்கர் கணக்கில் இடம் வாங்கி போட்டுள்ளார்கள். அவற்றை பறிமுதல் செய்தாலே பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை செலுத்த முடியும் என தெரிவித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...