தீபாவளி போனஸ் கேட்டு கோவையில் எஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்

கோவையில் ஓய்வூதியம் மற்றும் தீபாவளி போனஸ் வேண்டி தமிழ்நாடு எஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.


கோவை: கட்டுமான தொழிலாளர்களுக்கு வாரிய கூட்ட முடிவுப்படி 2000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும், தீபாவளி போனஸ் ஆக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கட்டட தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.



தமிழ்நாடு எஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஓய்வூதியம் மற்றும் தீபாவளி போனஸ் வேண்டி தமிழ்நாடு முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது.



இந்தப் போராட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு வாரிய கூட்ட முடிவுப்படி 2000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும், கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ஆக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன.



மாநிலம் முழுவதும் நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாவட்ட தமிழ்நாடு எஐடியுசி அமைப்பினர் கோவை பழைய தபால் நிலையத்தில் முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் மேற்கொண்டனர்.



முன்னதாக அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...