நீண்ட நாட்களாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த சரவணம்பட்டி பகுதி குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

போலீசார் சுட்டு விடுவேன் என மிரட்டுவதாகவும், குடும்பத்தினர் மீது கஞ்சா விற்பதாக பொய் வழக்கு போட்டு விடுவதாக மிரட்டுவதாகவும், கோவை சரவணம்பட்டியை சேர்ந்த சண்முகம் என்ற குற்றவாளி தெரிவித்துள்ளார். குடும்பத்தினருக்காக நீதிமன்றத்தில் சரண் அடைவதாக அவர் கூறினார்.


கோவை: திருந்தி வாழ்ந்து வரும் தன்னை போலீசார் தொடர்ந்து தேடி வருவதால் வழகறிஞர்களுடன் நீதிமன்றத்தில் சரண் அடைவதாக குற்றவாளி சண்முகம் தெரிவித்தார்.

கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் விக்கு என்கிற சண்முகம். இவர் மீது பத்திற்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள் உள்ளன. இவரை தனிப்படை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் கடந்த வாரம் இவரது சகோதரர் சிவா என்கிற சிவனேஸ்வரனை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது காவல்துறையிடம் இருந்து தப்ப முயன்ற சிவனேசர் கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் சண்முகம் இன்று தனது வழக்கறிஞர்களுடன் வந்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தார்.



அப்போது பேட்டியளித்த அவர் போலீசார் சுட்டு விடுவேன் என மிரட்டுவதாகவும், குடும்பத்தினர் மீது கஞ்சா விற்பதாக பொய் வழக்கு போட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் கூறினார். குடும்பத்தினருக்காக நீதிமன்றத்தில் சரண் அடைவதாக தெரிவித்தார். 15 வழக்குகள் இருப்பதால் போலீசார் தொடர்ந்து தேடி வருவதாகவும், எனவே தானாக முன் வந்து சரண் அடைவதாகவும் தெரிவித்தார். மேலும் சிறையில் இருந்து வெளியில் வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகின்றது என கூறிய அவர், திருந்தி வாழ்ந்து வரும் தன்னை போலீசார் தொடர்ந்து தேடி வருவதால் வழகறிஞர்களுடன் நீதிமன்றத்தில் சரண் அடைவதாகவும் தெரிவித்தார்.

தான் வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு ஆஜராக தயாராக இருந்ததாகவும், ஆனால் எதிர் தரப்பினர் தன்னை கொலை செய்யும் நோக்கில் திட்டமிட்டு வருவதால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனவும் கூறினார். இவ்வாறான சூழலில் காவல்துறையினர் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு நெருக்கடி கொடுப்பதாகவும் கடந்த வாரத்தில் தனது அண்ணனை பிடித்து காலை உடைத்து அரசு மருத்துவமனையில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் தன்னையும் காவல்துறையினர் சுட்டு விடுவார்கள் என்பதால் தாமாக முன்வந்து நீதிமன்றத்தில் ஆஜராவதாகவும், தன் குடும்பத்தினருக்கு எந்தவித பிரச்சனையும் வரக்கூடாது என்றார்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...