திருப்பூரில் இரண்டு வயது சிறுமியை கடித்த தெரு நாய்கள் - மருத்துவமனையில் அனுமதி

பெரியாண்டிபாளையம் பிரிவு பகுதியில் வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த கட்டிட தொழிலாளியின் இரண்டு வயது சிறுமியை ஆறு தெரு நாய்கள் சேர்ந்து கடித்து குதறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் இரண்டு வயது சிறுமியை தெரு நாய்கள் கடித்ததில் படுகாயம் அடைந்த சிறுமி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருப்பூர் மங்கலம் சாலை பெரியாண்டிபாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். கட்டிட வேலை செய்து வரும் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மனைவி வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை இவரது இரண்டு வயது மகள் நைனிகா வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த ஆறு தெரு நாய்கள் சிறுமியை கடித்து குதறி உள்ளது.



இதில் படுகாயம் அடைந்த சிறுமி திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு வார காலம் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பலமுறை மாநகராட்சி கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் இரண்டு வயது சிறுமியை தெருநாய்கள் கடித்து காயப்படுத்திய சம்பவம் மாநகராட்சி பகுதிக்குள் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...