கோவையில் உள்ள மழைநீர் வடிகால்கள் - மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

எம்.எஸ்.அவென்யூ, குறிச்சி பிரிவு, போத்தனூர் பிரதான சாலை, உமர் நகர் மற்றும் LLYODS அவென்யூ ஆகிய பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதிகளிலுள்ள மழைநீர் வடிகால் தூர்வாரவும், சேதமடைந்த சாலையை சரிசெய்யவும், பழுதடைந்த தெரு விளக்குகளை சரிசெய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைநீர் வடிகால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வாரிட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.95க்குட்பட்ட எம்.எஸ்.அவென்யூ, குறிச்சி பிரிவு, போத்தனூர் பிரதான சாலை, உமர் நகர் மற்றும் LLYODS அவென்யூ ஆகிய பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதிகளிலுள்ள மழைநீர் வடிகால் தூர்வாரவும், சேதமடைந்த சாலையை சரிசெய்யவும், பழுதடைந்த தெரு விளக்குகளை சரிசெய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.



அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.95க்குட்பட்ட போத்தனூர் பிரதான சாலையினை நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதியில் பாலம் அமைத்து, சாலையை சரிசெய்யவும், மழைநீர் வடிகால் தூர்வாரிடவும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்ட பின்பு,



வார்டு எண்.96க்குட்பட்ட சுந்தராபுரம், மதுக்கரை பிரதான சாலையில் உள்ள சிறுபாலத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.



பின்னர், தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்குட்பட்ட பிள்ளையார்புரம் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் தூர்வார உரிய திட்டமதிப்பீடு தயாரித்திடவும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அடிப்படை வசதிகளை உடனடியாக செய்துதரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்ட பின்பு,



பிள்ளையார்புரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கன்வாடி மையத்தில் உள்ள பதிவேடுகள், உணவு பொருட்களின் இருப்புகள் குறித்து கேட்டறிந்தார்.



அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.92க்குட்பட்ட பாலக்காடு பிரதான சாலை, கோவைப்புதூர் பிரிவு ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு, அப்பகுதியில் மழைநீர் வடிகால்கள் அமைக்க உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்ட பின்னர்,



குனியமுத்தூர், செங்குளம் பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.ச.செல்வசுரபி, ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், அஸ்லாம் பாஷா, அப்துல் காதர், இளஞ்சேகரன், உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பசும்பொன். மாநகராட்சி உதவி பொறியாளர்கள் சபரிராஜ். சதீஸ்குமார், சரண்யா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...