குண்டடம் அருகே கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் - விவசாயிகள் பங்கேற்பு

கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், கோமாரி நோய் தடுப்பூசி, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, நாய்களுக்கு வெறி நாய் தடுப்பூசி உள்ளிட்ட 1035 கால்நடைகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.


திருப்பூர்: குண்டடத்தை அடுத்த கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குப்புசிபாளையம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள வளாகத்தில் நடைபெற்றது.

முகாமிற்கு குண்டடம் வட்டார வேட்டை காளிபாளையம் கால்நடை மருத்துவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், கோமாரி நோய் தடுப்பூசி, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, நாய்களுக்கு வெறி நாய் தடுப்பூசி உள்ளிட்ட 1035 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

இதில் குண்டடம் வட்டார கால்நடை உதவி மருத்துவர் வனிதா மற்றும் சின்ன மோலார்பட்டி உதவி மருத்துவர் பிரகாசம் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் சிறந்த கால்நடை மேலாண்மை குழுக்கான மூன்று வளர்ப்பு கிடாரிகளுக்காக விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...