தாராபுரம் பகுதியில் மது பிரியர்களால் சுகாதார சீர்கேடு - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தாராபுரத்தில் பாருக்கு தடை செய்யப்பட்டதால் தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர், தின்பண்டங்கள் ஆகியவற்றை வாங்கி வந்து மதுக்கடைக்கு முன்பு அமர்ந்து மது குடித்து வருவது பெண்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. சிறுநீர் கழித்தும், எச்சில் துப்பியும், வாந்தி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டார பகுதிகளில் செயல்படும் மதுபான கடைகள் முன்பாக மது பிரியர்கள் மது குடிப்பதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

தாராபுரம் வட்டார பகுதியில் 12 டாஸ்மார்க் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் 3 மது கடை பாருகளுக்கு மற்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒன்பது மது கடைமார்களுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அனுமதி இல்லை என கூறி டாஸ்மார்க் நிர்வாகம் பார்களை சீல் வைத்து சென்றது இதனால் பாருக்கு தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக மதுபிரியர்கள் வேறு வழியின்றி வெளியில் பெட்டிக்கடையில் தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர், தின்பண்டங்கள் ஆகியவற்றை வாங்கி வந்து மதுக்கடைக்கு முன்பு அமர்ந்து மது குடித்து வருவது அந்த வழியில் செல்லும் பெண்கள் முகம் சுளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் அதே இடத்தில் சிறுநீர் கழித்தும், எச்சில் துப்பியும், வாந்தி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.

தற்போது மழைக்காலம் என்பதால் மழைநீர் தேங்கி சாக்கடை போல் இருப்பதாலும் பல்வேறு நோய்கள் டாஸ்மாக் மூலம் பரப்பப்படும் நிலை ஏற்பட்டுள்ளது இதை கருத்தில் கொண்டு டாஸ்மார்க் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மது பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....