வாக்காளர் பட்டியலில் திருத்தப்பணிகள் - உடுமலையில் சிறப்பு முகாம்களின் தேதி மாற்றம்

மாற்றி வைக்கப்பட்ட சிறப்பு முகாமை வாக்காளர்கள் பயன்படுத்தி பெயர் சேர்த்தல், நீக்கம் முகவரி மாற்றம் போன்ற திருத்தங்கள் மேற்கொண்டு பயன் அடையுமாறு உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 18 மற்றும் 19 ம் தேதிகளில் வாக்குச் சாவடிகளில் நடைபெற இருந்த 2-ம் கட்ட சிறப்பு முகாம் வருகின்ற 25 (சனி)மற்றும் 26 -(ஞாயிறு) தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டு உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் படி கடந்த மாதம் 27-ம் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு வழக்கமான திருத்தப் பணிகள் தொடங்கியது. அன்றைய தினத்தில் இருத்து பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரிமாற்றம், திருத்தம் செய்தல், வாக்குச்சாவடி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு வாக்காளர் உதவி மைய செயலி மற்றும் இணையதள வாயிலாகவும் நேரில் படிவங்கள் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 4 மற்றும் 5- ம் தேதிகளில் வாக்குச்சாவடிகளில் முதல் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் முகவரி மாற்றம், திருத்தம் செய்தலுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அப்போது பல்வேறு அரசியல் கட்சியினரும் பொது மக்களை அழைத்து வந்து திருத்தங்களை மேற்கொண்டனர்.

உடுமலை பகுதியில் நடைபெற்ற இந்த பணிகளை உடுமலை தாசில்தார் ப.சுந்தரம் மற்றும் தேர்தல் துணை தாசில்தார் சையது ராபியம்மாள் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.மேலும் 2-ம் கட்ட சிறப்பு முகாம் வருகின்ற 18 மற்றும் 19 ம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் மாற்றி வைக்கப்பட்ட தேதியில் சிறப்பு முகாமை வாக்காளர்கள் பயன்படுத்தி திருத்தங்கள் மேற்கொண்டு பயன் அடையுமாறு உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...