கோவையில் விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் - கலெக்டர் அதிரடி உத்தரவு

நீலாம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அவிநாசி ரோட்டில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், மெகா சைஸ் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன. இத்தகவல், கலெக்டர் கிராந்திகுமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக, அவ்விளம்பர பலகைகளை அகற்ற சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.


கோவை: கோவை - அவிநாசி ரோட்டில், நீலாம்பூரில் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இருந்த விளம்பர பலகைகள், நேற்று அகற்றப்பட்டன. வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையில், சாலை சந்திப்புகள், பிரதான சாலைகளுக்கு அருகில் விளம்பர பலகைகள் வைக்கக்கூடாது.

கோவையில் அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாத சமயங்களில், மெகா சைஸ் விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன. சில நாட்களுக்கு முன், கோவை நகர் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகள், மாநகராட்சி நகரமைப்பு பிரிவினரால் அகற்றப்பட்டன.

நீலாம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அவிநாசி ரோட்டில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், மெகா சைஸ் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன. இத்தகவல், கலெக்டர் கிராந்திகுமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக, அவ்விளம்பர பலகைகளை அகற்ற, சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, நீலாம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சட்ட விரோதமாக, அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த அனைத்து விளம்பரபலகைகளும், நேற்று அகற்றப்பட்டன. இரும்பு சட்டங்கள் பறிமுதல் செய்யப்படும். சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜ் கூறுகையில், ''அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள், ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு வருகின்றன. அனைத்து விளம்பர பலகைகளும் அகற்றப்படும். இரும்பு சட்டங்களையும் வெட்டி எடுக்க, சம்பந்தப்பட்ட நிறுவனத்தினருக்கு அறிவுறுத்தியிருக்கிறோம். அவர்களே அகற்றாவிட்டால், ஊராட்சி சார்பில் அகற்றி, அதற்குரிய செலவு தொகை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் வசூலிக்கப்படும். அறுத்தெடுக்கப்படும் இரும்பு சட்டங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார்.

Newsletter

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...