கோவையில் விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் - கலெக்டர் அதிரடி உத்தரவு

நீலாம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அவிநாசி ரோட்டில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், மெகா சைஸ் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன. இத்தகவல், கலெக்டர் கிராந்திகுமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக, அவ்விளம்பர பலகைகளை அகற்ற சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.


கோவை: கோவை - அவிநாசி ரோட்டில், நீலாம்பூரில் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இருந்த விளம்பர பலகைகள், நேற்று அகற்றப்பட்டன. வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையில், சாலை சந்திப்புகள், பிரதான சாலைகளுக்கு அருகில் விளம்பர பலகைகள் வைக்கக்கூடாது.

கோவையில் அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாத சமயங்களில், மெகா சைஸ் விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன. சில நாட்களுக்கு முன், கோவை நகர் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகள், மாநகராட்சி நகரமைப்பு பிரிவினரால் அகற்றப்பட்டன.

நீலாம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அவிநாசி ரோட்டில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், மெகா சைஸ் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன. இத்தகவல், கலெக்டர் கிராந்திகுமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக, அவ்விளம்பர பலகைகளை அகற்ற, சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, நீலாம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சட்ட விரோதமாக, அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த அனைத்து விளம்பரபலகைகளும், நேற்று அகற்றப்பட்டன. இரும்பு சட்டங்கள் பறிமுதல் செய்யப்படும். சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜ் கூறுகையில், ''அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள், ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு வருகின்றன. அனைத்து விளம்பர பலகைகளும் அகற்றப்படும். இரும்பு சட்டங்களையும் வெட்டி எடுக்க, சம்பந்தப்பட்ட நிறுவனத்தினருக்கு அறிவுறுத்தியிருக்கிறோம். அவர்களே அகற்றாவிட்டால், ஊராட்சி சார்பில் அகற்றி, அதற்குரிய செலவு தொகை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் வசூலிக்கப்படும். அறுத்தெடுக்கப்படும் இரும்பு சட்டங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...