தாராபுரம் அருகே காற்றாலை நிறுவன லாரி மோதி மின்கம்பங்கள் சேதம் - சிரமத்திற்குள்ளாகும் பொதுமக்கள்

உயர் மின்னழுத்த மின்கம்பங்கள் சாலையின் நடுவில் கிடந்ததால் பெரும் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதே போல் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது.


திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள பகுதிகளில் இயங்கி வரும் தனியார் விண்டு மில் மின் உற்பத்தி நிலையங்களில் நடைபெற்று வரும் பணிகளால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள கரையூர் மற்றும் ஆலம்பாளையம் பகுதிகளில் தனியார் விண்டு மில் மின் உற்பத்தி நிலையங்களில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக மீண்டும் மில்லின் உதிரி பாகங்கள் ஆன இறக்கைகள் மற்றும் கோபுர தூண்கள் ட்ரான்ஸ்பார்மர்கள் ஆகியவற்றை லாரிகள் மூலம் கர்நாடகா மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு சாலை வழியில் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தாராபுரம் அருகே உள்ள கரையூர் பகுதியில் காத்தாடியின் உதிரி பாகங்களை கனரக வாகனங்களில் தனியார் விண்டு மில் நிறுவனத்தினர் கொண்டு வந்தனர்.

அப்போது தாறுமாறாக கனரக வாகனங்கள் விண்டுமில் உதிரிபாகங்களை ஏற்றுக் கொண்டு வந்த போது கரையூர் காளியம்மன் கோவில் பகுதியில் உள்ள மின் கம்பங்களை உடைத்தும் பெயர்களை சேதப்படுத்தியது.

அதேபோல் கரையூர் கிராமம் முழுவதும் உள்ள 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மேலும் உயர் அழுத்த மின்கம்பங்கள் சாலையின் நடுவில் கிடந்ததால் பெரும் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு இருந்தது அதுமட்டுமின்றி கரையூர் மற்றும் ஆறாம் பாளையம் ஆகிய இரண்டு கிராமங்களுக்கு 20க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...