பாப்பம்பட்டியில் இருந்த டாஸ்மாக் கடையினை இடையர்பாளையம் பகுதிக்கு இடமாற்றம் செய்ததைக் கண்டித்து ஆட்சியரிடம் மனு

பாப்பம்பட்டியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையினை இடையர்பாளையம் பகுதிக்கு இடமாற்றம் செய்ததைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், சூலூர் வட்டம், பாப்பம்பட்டி கிராமத்தில் தற்பொழுது பல்லடம் முதல் கொச்சின் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை நீதிமன்ற உத்தரவுப்படி வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பதால் தற்பொழுது இந்த மதுபான கடையை பாப்பம்பட்டி முதல் இடையர்பாளையம் சாலையில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த இடத்தின் அருகில் விவசாய தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்டவை உள்ளதால் டாஸ்மாக் கடை அமைப்பதன் மூலம் அப்பகுதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பெரும் சிரமம் ஏற்படும். 

மேலும், இப்பகுதி முக்கியசாலையில் உள்ள அபாய வளைவு பகுதியாகும். மேலும், இங்கு மதுபான கடை அமைத்தால் விபத்துகள் அதிகரிக்கும்.

எனவே கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு இடையர்பாளையம் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதை தடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...