கோவையில் தார்சாலை அமைக்கும் பணி - மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

வார்டு எண்.42-க்குட்பட்ட அண்ணா நகரில் தார் சாலையை முறையாக (compact) செய்யாததால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி ரூ.50,000/- அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் தார் சாலை பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வார்டு எண்.42-க்குட்பட்ட அண்ணா நகரில் தார் சாலையை முறையாக (compact) செய்யாததால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி ரூ.50,000/- அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.39க்குட்பட்ட கீர்த்தி நகர், அஜ்ஜனூர் பகுதியில் மாநில நிதி கழக (SFC-State Financial Corporation) திட்டத்தின்கீழ் 630 மீட்டர் தொலைவிற்கு ரூ.41.61 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அதனைத் தொடர்ந்து, மேற்கு மண்டலம் வார்டு எண்.38-க்குட்பட்ட கிருஷ்ணா நகர் பகுதியில் மாநில நிதி கழக (SFC-State Financial Corporation) திட்டத்தின்கீழ் 415 மீட்டர் தொலைவிற்கு ரூ.27.39 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தையும்,



வார்டு எண்.41க்குட்பட்ட சென்னிமலை ஆண்டவர் நகர் பி.என்.புதூரில் (NSMT 2023-24 Package-13) நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் 341 மீட்டர் தொலைவிற்கு ரூ.7.16 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தையும் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர், வார்டு எண்.42க்குட்பட்ட அம்பேத்கர் நகரில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், அப்பகுதியில் சாலையோரம் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்ட பின்பு, வார்டு எண்.42க்குட்பட்ட அண்ணா நகரில் தார் சாலையை முறையாக (compact) செய்யாததால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி ரூ.50,000/- அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர்கள் பிரவின்ராஜ், லட்சுமி, சாந்தி, உதவி ஆணையர் சந்தியா, உதவி செயற்பொறியாளர் யோகசித்ரா, உதவி பொறியாளர்கள் ஐசக் ஆர்தர், விமலா, சவிதா, சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், ராஜேந்திரன், ரமேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...