பாரதியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு - உடுமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் தங்கப்பதக்கம்

பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம் மற்றும் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவ மாணவிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.


திருப்பூர்: பாரதியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கும் ரயில் உடுமலை அரசு கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

பாரதியார் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற தேர்வில் உடுமலை அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் 4 பேர் தங்கப்பதக்கம் மற்றும் இருவர் வெள்ளிப்பதக்கம் என 15 பேர் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து உள்ளனர். பாரதியார் பல்கலைக் கழகத்தில் 2022 - 23 ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற தேர்வு முடிவுகள் தொடர்பாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் உடுமலை அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் 15 பேர் அதிக மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்.

இளநிலை பட்ட வகுப்பு புள்ளியியல் துறை மாணவி பாண்டீஸ்வரி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். அரசியல் அறிவியல் துறையில் மாணவி வேதநாயகம் 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.

மின்வணிகவியல் துறையில் மாணவன் பிரபாகரன் 3-ம் இடத்தையும், மாணவி உதயமலர் 4-ம் இடத்தையும் பெற்றுள்ளனர். தாவரவியல் துறையில் மாணவி லிடியா 3-ம் இடத்தையும், ரமணி 10-ம் இடத்தையும் பெற்றுள்ளனர். இயற்பியல் துறையில் மாணவி அர்ஸ்மா 7-ம் இடத்தைப் பெற்றுள்ளார். வேதியியல் துறையில் மாணவன் பொன்ஜீவகன் 6-ம் இடத்தைப் பெற்றுள்ளார். தமிழ்த் துறையில் மாணவி சத்யசுப்ரபானு 10-ம் இடத்தையும் பிடித்துள்ளார்.

முதுநிலைப் பட்ட வகுப்பு சுற்றுலாவியல் துறையில் மாணவி ஷாலினி முதலிடம் பெற்றுத் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதேதுறையில் பத்மநாதன் 2-ம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார். புள்ளியியல் துறையில் மாணவி சந்தியா முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். முதுநிலை வேதியியல் துறையில் மாணவன் கிஷோர் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். முதுநிலை பொருளியல் துறையில் அபிதா 5-ம் இடத்தைப் பெற்றுள்ளார். முதுநிலை இயற்பியல் துறையில் அனிஸ் பாத்திமா 10-ம் இடத்தையும் பெற்றுள்ளார்.



பாராட்டு பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம் மற்றும் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவ மாணவிகளை கல்லூரி முதல்வர் சோ.கி. கல்யாணி, தமிழ்த்துறைத்தலைவர் மு. மதியழகன், வேதியியல் துறைத் தலைவர் மா. சிவகுமார், இயற்பியல் துறைத்தலைவர் ஆ.சந்தானம், அரசியல் அறிவியல் துறைத்தலைவர் ஆர். இளங்கோ, மின் வணிகவியல் துறைத் தலைவர் நா.கதிர்வேல்,பொருளியல் துறைத் தலைவர் ம.கோகிலா, புள்ளியியல் துறைத் தலைவர் ஜே. பூங்கோதை, தாவரவியல் துறைத்தலைவர் எம். ஜெயேந்திரன்,சுற்றுலாவியல் துறைத் தலைவர் அ.சு. விஜய் ஆனந்த் மற்றும் அனைத்துத் துறைப் பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள், முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை பொறுப்பாளர்கள் ஆகியோர் வாழ்த்திப் பாராட்டினார்கள்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...