கூடலூர் நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது

கூடலூர் நகராட்சியின் 19 வார்டு முதல் 27வது வார்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கென நடத்தப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாம் கட்ட சிறப்பு முகாமில் 20க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.



கேஸ் கம்பெனி பிரிவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமிற்கு நகராட்சித் தலைவர் அ.அறிவரசு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் மண்டல நகராட்சிகள் நிர்வாகத் துறை இணை இயக்குனர் மருத்துவர். இளங்கோவன் கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்தார். துணை தலைவர் ரதிராஜேந்திரன், ஆணையாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கூடலூர் நகராட்சியின் 19 முதல் 27 வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கென நடத்தப்பட்ட இதில் 20க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

இதனை கோவை வடக்கு வட்டாட்சியர் மணிவேல் பெரியநாயக்கன்பாளையம் வருவாய் ஆய்வாளர் சித்ரா ஆகியோர் பார்வையிட்டனர். முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன், மின்வாரிய உதவி பொறியாளர் சிவகுமார், குடிமைப் பொருள் வழங்கல் துறை வட்டாச்சியர் சாந்தாமணி, குடிசை மாற்று வாரிய அதிகாரி கருப்பு சாமி, நகரமன்ற உறுப்பினர்கள் முருகானந்தம், கீர்த்தனா, சரண்யா, ஜானர்த்தனன், ரேகா, கவிதா ராணி, ராகுல், பொன்மாடசாமி, பாலசுப்பிரமணியன், துரை செந்தில், பேங்க் முருகேசன், தவமணி, மணிமேகலை, சாந்தமணி, உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பொறியாளர் சோமசுந்தரம், மேளாளர் குமார், காதார ஆய்வாளர் திருப்பதி, மேற்பார்வையாளர் தர்மராஜ், பொறுத்துநர் வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...