கோவையில் ஈட்ரைட் மில்லட் பைக்கத்தான்- மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து துறை, ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இணைந்து சிறுதானிய ஊட்டச்சத்து நன்மைகளை எடுத்துரைக்கும் வகையில் ஈட்ரைட் மில்லட் பைக்கத்தான் என்ற இருசக்கர விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


கோவை: சிறுதானிய ஆண்டை முன்னிட்டு அரசு சார்பிலும், பல்வேறு தனியார் நிறுவனங்கள் சார்பிலும் இந்த ஆண்டு முழுவதும் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து துறை, ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இணைந்து சிறுதானியங்களின் ஊட்டச்சத்து நன்மைகளைஎடுத்துரைக்கும் வகையில் ஈட்ரைட் மில்லட் பைக்கத்தான் என்ற இருசக்கர விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

இந்தப் பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும் இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, உக்கடம் பொள்ளாச்சி வழியாக சக்தி கல்லூரியை சென்றடைகிறது. இதில் 15க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...