இருட்டறையில் அடைத்து மாணவன் சித்தரவதை- பிரபல நேரு கல்வி குழுமத்தின் தலைவர் கைது


நேரு கல்வி குழும கல்லூரி வாளாகத்தில் இருட்டறையில் அடைத்து வைத்து எட்டு நாட்கள் மாணவனை சித்தரவதை செய்ததாக நேரு கல்விக்குழுமத்தின் தலைவர் கிருஷ்ணதாஸ் கேரள மாநிலம் திருச்சூரில் கைது செய்யப்பட்டார்.

கோவையில் பிரபல நேரு கல்விக்குழுமம் இயங்கி வருகிறது. ஏரோநாட்டிக்கல், டெக்னாலஜி, பொறியியல் உள்ளிட்ட பல்வேறு  பிரிவுகளில் இக்குழுமத்தின் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. 

இதேபோல கேரள மாநிலத்திலும் இந்த குழுமத்தின் சார்பில் கல்லூரிகள் இயங்கிவருகிறது. இந்த கல்விக்குழுமத்தின் தலைவராக கிருஷ்ணதாஸ் உள்ளார். இந்த கல்விக் குழுமத்திற்கு சொந்தமான கல்லூரிகளில் மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இந்நிலையில் கேரள மாநிலம் திருச்சூரில் பாம்பாட்டி என்கிற பகுதியில் நேரு அகாடமி சட்டக்கல்லூரியில் கடந்த ஜனவரி மாதம் விஷ்ணுபினராய் என்கிற மாணவனை கல்லூரி நிர்வாகம் சித்தரவதை செய்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதே கல்லூரியில் பயின்று வந்த திருச்சூர் எருமப்பட்டியை சேர்ந்த சக்கீர் சவுகத் என்கிற மாணவனை கல்லூரி வளாகத்தில் உள்ள இருட்டறையில் எட்டு நாட்களுக்கு மேலாக அடைத்துவைத்து சித்தரவதை செய்துள்ளனர்.

இதனையடுத்து தப்பி வந்த மாணவனின் புகாரின் பேரில் நேரு கல்விக்குழுமத்தின் தலைவர் கிருஷ்ணதாஸ் மற்றும் கல்லூரி சட்ட ஆலோசகர் சுசித்திரா, வல்சன்குமார் மற்றும் பேராசிரியர் சுகுமார் ஆகியோரை திருச்சூர் எருமப்பட்டி காவல்துறையினர் கைதுசெய்தனர்.

கோவையில் பிரபலமாக செயல்பட்டு வரும நேரு கல்விக்குழுமத்தின் தலைவர் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...