புத்தாண்டை வரவேற்க கோவையில் வானில் வண்ண கோலமிட்டு வர்ணஜாலம் செய்த லேசர் லைட் ஷோ

புத்தாண்டை வரவேற்கும் விதமாக ட்ரோன்கள் பறக்க விடப்பட்டு, டால்பின் உலா வருவது போன்ற காட்சிகள் வடிவமைக்கப்பட்டது. பின்னர், 2024 ஆங்கில புத்தாண்டு பிறந்தது என அறிவிக்கப்பட்டபோது பொதுமக்கள் அனைவரும் ஹேப்பி நியூ இயர் என முழங்கி புத்தாண்டை வரவேற்றனர்.


கோவை: உலகம் முழுவதும் 2024 ஆம் ஆண்டு ஆங்கில வருட பிறப்பை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையிலே கோவையில் வாலாங்குளத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் கலை கட்டியது.



பொதுமக்களின் கண்களை கவரும் வகையில் லேசர் லைட்டுகள் பொருத்தப்பட்டு ஒளிர விடப்பட்டன.



வானில் வண்ணங்களை தீட்டி வர்ணஜாலம் செய்த லேசர் ஷோ, அங்கிருந்த பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.



அத்தோடு மட்டுமின்றி புத்தாண்டை வரவேற்கும் விதமாக ட்ரோன்கள் பறக்க விடப்பட்டு, டால்பின் உலா வருவது போன்ற காட்சிகளை வடிவமைத்து, 2024 ஆங்கில புத்தாண்டு பிறந்ததனை அறிவித்து, பொதுமக்களை குஷி படுத்தினர்.



வாலாங்குளத்தில் குளக்கரையில் குழுமியிருந்த பொதுமக்கள், ஹேப்பி நியூ இயர் என முழங்கி புத்தாண்டை உற்சாகமுடன் வரவேற்றனர். கடந்த ஆண்டு வெள்ளம் மற்றும் தற்பொழுது கொரோனா பரவல் இருக்கின்ற நிலையில், நடப்பாண்டில் இவை அனைத்தும் இல்லாமல் பொதுமக்கள் நலமுடன் இருக்க வேண்டுமென பலர் தங்கள் விருப்பத்தினை தெரிவித்தனர்.

நாட்டின் வளர்ச்சியில், இந்த ஆண்டு பெரும் பங்காற்ற வேண்டும் என பலரும் தெரிவித்தனர். பெண்கள், ஆண்கள் என பலர், இந்த வருடம் என்ன ரெசல்யூஷன் என்பதையும், சுவாரசியுடன் தெரிவித்து புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...