கோவையில் நள்ளிரவிரல் அசைவ கடையில் குவிந்த மக்கள் - போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு

காவல்துறை அனுமதித்த நேரத்தை கடந்து, 3 மணிக்கு மேல் கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடைகளை மூட போலிசார் அறிவித்து வந்தனர். அப்போது அங்கிருந்த அசைவ பிரியர்கள் யாரும் கலைந்து செல்லவில்லை. இதனால் போலிசார் லேசான தடியடி நடத்தினர்.


கோவை: உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டட்டம் நள்ளிரவு முதலே ஆரம்பித்தது. இந்த நிலையிலே, கோவையில் பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கொண்டாட்டத்தில் ஆடி, பாடி குதூகலத்துடன் புத்தாண்டை ரசித்த பொதுமக்கள், அதன் பின்னர் ருசிக்க திட்டமிட்டு உணவங்களை முகாமிட்டனர். இரவு 1 மணிக்கு மேல் உணவு உட்கொள்ள, அசைவ உணவகங்களை பெரும்பாலானோர் தேடி சென்றனர்.



அதன் அடிப்படையில் கோவை கோட்டைமேடு பகுதில் பிரியானி, கிரில் சிக்கன், சிக்கன் ரைஸ் உள்ளிட்ட அசைவ உணவுகளை உட்கொள்ள அசைவ பிரியர்கள் அலைமோதினர்.



இதனால் இரவில் அந்த பகுதி சாலைகள் நெரிசலாக காணப்பட்டது.



காவல்துறை அனுமதித்த நேரத்தை கடந்து, 3 மணிக்கு மேல் கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடைகளை மூட போலிசார் அறிவித்து வந்தனர். அப்போது அங்கிருந்த அசைவ பிரியர்கள் யாரும் கலைந்து செல்லவில்லை. இந்த நிலையிலெ, போலிசார் லேசான தடியடி நடத்தினர்.



இதனால் அசைவ பிரியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். புத்தாண்டு கொண்டாட்டிவிட்டு அசைவம் ருசிக்க வந்தவர்கள் அடி வாங்கி வீடு திரும்பினர். லேசான தடியடி நடத்தியதால் பரபரப்பாக காணப்பட்டது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...