கோவையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரைப் போட்டி

கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜனவரி 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜனவரி 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமார் பாடி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ் வளா்ச்சித் துறை மூலம் 2023-24 ஆம் ஆண்டுக்கான பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மாவட்டத்தில் ஜனவரி 9 ஆம் தேதி பள்ளி அளவிலும், 10 ஆம் தேதி கல்லூரி அளவிலும் மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் டவுன்ஹால் அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில் காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளன.

பேச்சுப் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் 11, 12 ஆம் வகுப்பு மாணவா்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்தின் வாயிலாக தாங்கள் பயிலும் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் இருந்தும், கல்லூரி மாணவா்கள் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் வாயிலாக தாங்கள் பயிலும் கல்லூரி முதல்வரிடம் கட்டாயம் பரிந்துரைக் கடிதம் பெற்றுவர வேண்டும்.

ஒரு பள்ளி, கல்லூரியில் இருந்து ஒரு போட்டிக்கு ஒருவா் வீதம் 3 மாணவா்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். பள்ளி, கல்லூரி அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் என்ற வகையில் பரிசுத் தொகைகள் வழங்கப்படவுள்ளன.

போட்டிகள் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். பரிசுத் தொகைகள் மற்றொரு நாளில் வழங்கப்படும். சென்னை தமிழ் வளா்ச்சி இயக்ககத்தில் இருந்து முத்திரையிட்ட உறைகளில் இருந்து பெறப்படும் தலைப்புகள், போட்டி தொடங்குவதற்கு முன்னா் நடுவா்கள், மாணவா்கள் முன்னிலையில் எடுத்து அறிவிக்கப்படும். ஜனவரி 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் இப்போட்டிகளில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...