கரைப்புதூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம் - கணினிகள் வேலை செய்யாததால் மக்கள் அவதி

மக்களுடன் முதல்வர் முகாமில், சில துறைகளுக்கு வெறும் நாற்காலி மட்டும் போடப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. அரசு அலுவலகங்களில் கமிஷன் மற்றும் லஞ்சங்களை தவிர்க்கும் வகையில் இந்த முகாம் போடப்பட்டுள்ள நிலையில் முறையான ஏற்பாடு செய்யப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சியில் இன்று மக்களுடன் முதல்வர் முகாம் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்றது.

இம்முகாமில் தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை,காவல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, ஆதிதிராவிடர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகள், வாழ்வாதார கடன் உதவிகள் போன்ற பல்வேறு துறை அதிகாரிகள் ஒரே இடத்தில் மக்கள் அளிக்கும் மனுக்களை பெற்று 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.



புதிய மின் இணைப்பு, மின் கட்டண மாற்றங்கள், கூடுதல் மின்சுமை கட்டணங்கள், பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், வர்த்தக உரிமம், குடிநீர் இணைப்பு, பிறப்புச் சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, பொருளாதார குற்றங்கள், நில அபகரிப்பு மோசடி, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்ரோல் ஸ்கூட்டர், கல்வி உதவித்தொகை, தொழில் பயிற்சி, நல வாரியங்களின் உறுப்பினர் பதிவு, உதவித்தொகை பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், புதுமைப்பெண் கல்வி உதவி திட்டம், கல்வி உதவித்தொகை, தாட்கோ கடன் உதவிகள், மகளிர் சுய உதவிக் குழு, கடன் உதவிகள் போன்ற பல்வேறு மனுக்களை கரைப்புதூர் ஊராட்சி மக்கள் மனுவாக அளிக்க வந்தனர்.



இந்நிலையில் மனுக்களை பதிவு செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த சில கணினிகள் பழுதடைந்ததால் மனு அளிக்க வந்த பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.



நீண்ட நேரம் சிரமத்திற்கு பின் அதிகாரிகள் கனிணிகளை சரி செய்தனர்.



மேலும் சில துறைகளுக்கு வெறும் நாற்காலி மட்டும் போடப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. அரசு அலுவலகங்களில் கமிஷன் மற்றும் லஞ்சங்களை தவிர்க்கும் வகையில் இந்த முகாம் போடப்பட்டுள்ள நிலையில் முறையான ஏற்பாடு செய்யப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...