தாராபுரம் மக்காச்சோள விதை பண்ணையில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

தொப்பம்பட்டி கிராமத்தில் உளுந்து வம்பன் 11 மற்றும் பரப்பாளையம் கிராமத்தில் நிலக்கடலை தரணி, நிலக்கடலை கதிரிலெப்பாச்சி, வீரிய ஒட்டு மக்காச்சோளம் கோ 8 ரகங்களை கொண்டு விதை பண்ணைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, விதை பண்ணைகள் அமைத்து தரமான விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுவதை விதைச்சான்று அலுவலர்கள் பயிற்சி பருவம் பூக்கும் பருவம் மற்றும் அறுவடை பருவங்களில் வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட கலவன்கள் எதுவும் இல்லை என்பதை ஆய்வு செய்து உறுதிப்படுத்தினர்.

புறந்தூய்மை முளைப்புத்திறன் ஈரப்பதம் மற்றும் பிற இன கலப்பு ஆய்வு செய்யப்பட்டு தரமானது என ஆய்வறிக்கை பெறப்படுகிறது. ஆய்வு அறிக்கை பெற்ற பின் சான் டிரட்டைகள் பொருத்தி தரமான விதைகள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. தாராபுரம் வட்டாரத்தில் தொப்பம்பட்டி கிராமத்தில் உளுந்து வம்பன் 11 மற்றும் பரப்பாளையம் கிராமத்தில் நிலக்கடலை தரணி நிலக்கடலை கதிரிலெப்பாச்சி வீரிய ஒட்டு மக்காச்சோளம் கோ 8 ரகங்களை கொண்டு வேளாண்மை பொது மேலாளர் டான்சிடா விதை உற்பத்தியாளர்களாக விதை பண்ணைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்போது விதை சான்று அலுவலர் மனோஜ் குமார் உதவி அலுவலர் தேசிங்கு ராஜன் ஆகியோர் வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விதைப்பண்ணை விவசாயிகளுக்கு தொழில் நுட்பங்கள் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...